| ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு முது முறைப் |
| பால் அன்ன மேனியான் அணி பெறத் தைஇய |
| நீல நீர் உடை போல, தகை பெற்ற வெண் திரை |
| வால் எக்கர்வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப! |
5 | ஊர் அலர் எடுத்து அரற்ற, உள்ளாய், நீ துறத்தலின், |
| கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்மன் |
| காரிகை பெற்ற தன் கவின் வாடக் கலுழ்பு, ஆங்கே, |
| பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லாக்கால் |
| இணைபு இவ் ஊர் அலர் தூற்ற, எய்யாய், நீ துறத்தலின், |
10 | புணை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்மன் |
| துணையாருள் தகை பெற்ற தொல் நலம் இழந்து, இனி, |
| அணி வனப்பு இழந்த தன் அணை மென் தோள் அல்லாக்கால் |
| இன்று இவ் ஊர் அலர் தூற்ற, எய்யாய், நீ துறத்தலின், |
| நின்ற தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்மன் |
15 | வென்ற வேல் நுதி ஏய்க்கும் விறல் நலன் இழந்து, இனி, |
| நின்று நீர் உகக் கலுழும் நெடும் பெருங் கண் அல்லாக்கால் |
| அதனால், |
| பிரிவு இல்லாய் போல, நீ தெய்வத்தின் தெளித்தக்கால், |
| அரிது என்னாள், துணிந்தவள் ஆய் நலம் பெயர்தர, |
20 | புரி உளைக் கலிமான் தேர் கடவுபு |
| விரி தண் தார் வியல் மார்ப! விரைக நின் செலவே |