| 'தோள் துறந்து, அருளாதவர் போல் நின்று, |
| வாடை தூக்க, வணங்கிய தாழை |
| ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை, |
| நளி இருங் கங்குல், நம் துயர் அறியாது, |
5 | அளி இன்று, பிணி இன்று, விளியாது, நரலும் |
| கானல் அம் சேர்ப்பனைக் கண்டாய் போல, |
| புதுவது கவினினை' என்றியாயின், |
| நனவின் வாரா நயனிலாளனைக் |
| கனவில் கண்டு, யான் செய்தது கேள், இனி: |
10 | 'அலந்தாங்கு அமையலென்' என்றானைப் பற்றி, 'என் |
| நலம் தாராயோ?' என, தொடுப்பேன் போலவும், |
| கலந்து ஆங்கே என் கவின் பெற முயங்கி, |
| 'புலம்பல் ஓம்பு' என, அளிப்பான் போலவும் |
| 'முலையிடைத் துயிலும் மறந்தீத்தோய்' என, |
15 | நிலை அழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும், |
| 'வலை உறு மயிலின் வருந்தினை, பெரிது' என, |
| தலையுற முன் அடிப் பணிவான் போலவும் |
| கோதை கோலா, இறைஞ்சி நின்ற |
| ஊதைஅம் சேர்ப்பனை, அலைப்பேன் போலவும், |
20 | 'யாது என் பிழைப்பு?' என நடுங்கி, ஆங்கே, |
| 'பேதையைப் பெரிது' எனத் தெளிப்பான் போலவும் |
| ஆங்கு |
| கனவினால் கண்டேன் தோழி! 'காண் தகக் |
| கனவின் வந்த கானல் அம் சேர்ப்பன் |
25 | நனவின் வருதலும் உண்டு' என |
| அனை வரை நின்றது, என் அரும் பெறல் உயிரே |