| ‘அணை மருள் இன் துயில் அம் பணைத் தட மென் தோள், |
| துணை மலர் எழில் நீலத்து ஏந்து எழில் மலர் உண் கண், |
| மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண் பல், |
| மணம் நாறு நறு நுதல், மாரி வீழ் இருங் கூந்தல், |
5 | அலர் முலை ஆகத்து, அகன்ற அல்குல், |
| சில நிரை வால் வளை, செய்யாயோ!’ என, |
| பல பல கட்டுரை பண்டையின் பாராட்டி, |
| இனிய சொல்லி, இன்னாங்குப் பெயர்ப்பது, |
| இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே |
10 | ‘பொருள் அல்லால் பொருளும் உண்டோ?’ என, யாழ நின் |
| மருளி கொள் மட நோக்கம், மயக்கப்பட்டு அயர்த்தாயோ? |
| ‘காதலார் எவன் செய்ப, பொருள் இல்லாதார்க்கு? என, |
| ஏதிலார் கூறும் சொல் பொருளாக மதித்தாயோ? |
| செம்மையின் இகந்து ஒரீஇப் பொருள் செய்வார்க்கு, அப் பொருள் |
15 | இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ? |
| அதனால், |
| எம்மையும் பொருளாக மதித்தீத்தை; நம்முள் நாம் |
| கவவுக் கை விடப் பெறும் பொருட் திறத்து |
| அவவுக் கைவிடுதம்; அது மனும் பொருளே |