| அரிதினின் தோன்றிய யாக்கை புரிபு தாம் |
| வேட்டவை செய்து, ஆங்கு, காட்டி மற்று ஆங்கே, |
| அறம் பொருள் இன்பம் என்று அம் மூன்றின் ஒன்றன் |
| திறம் சேரார் செய்யும் தொழில்கள் அறைந்தன்று |
5 | அணி நிலைப் பெண்ணை மடல் ஊர்ந்து, ஒருத்தி |
| அணி நலம் பாடி வரற்கு |
| ஓரொருகால் உள்வழியள் ஆகி, நிறை மதி |
| நீருள் நிழல் போல், கொளற்கு அரியள் போருள் |
| அடல் மாமேல் ஆற்றுவேன் என்னை மடல்மாமேல் |
10 | மன்றம் படர்வித்தவள் வாழி, சான்றீர்! |
| பொய் தீர் உலகம் எடுத்த கொடிமிசை, |
| மை அறு மண்டிலம் வேட்டனள் வையம் |
| புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு ஊக்கும் |
| இன்னா இடும்பை செய்தாள் அம்ம, சான்றீர்! |
15 | கரந்தாங்கே இன்னா நோய் செய்யும்; மற்று இஃதோ |
| பரந்த சுணங்கின் பணைத் தோளாள் பண்பு? |
| இடி உமிழ் வானத்து, இரவு இருள் போழும் |
| கொடி மின்னுக் கொள்வேன் என்றன்னள் வடி நாவின் |
| வல்லார் முன் சொல் வல்லேன் என்னைப் பிறர் முன்னர்க் |
20 | கல்லாமை காட்டியவள் வாழி, சான்றீர்! |
| என்று, ஆங்கே, |
| வருந்த மா ஊர்ந்து, மறுகின்கண் பாட, |
| திருந்திழைக்கு ஒத்த கிளவி கேட்டு, ஆங்கே, |
| பொருந்தாதார் போர் வல் வழுதிக்கு அருந் திறை |
25 | போல, கொடுத்தார், தமர் |