| 'துனையுநர் விழை தக்க சிறப்புப்போல், கண்டார்க்கு |
| நனவினுள் உதவாது நள்ளிருள் வேறாகும் |
| கனவின் நிலையின்றால், காமம்; ஒருத்தி |
| உயிர்க்கும்; உசாஅம்; உலம்வரும்; ஓவாள், |
5 | கயல் புரை உண்கண் அரிப்ப அரி வார, |
| பெயல் சேர் மதி போல, வாள் முகம் தோன்ற, |
| பல ஒலி கூந்தலாள், பண்பு எல்லாம் துய்த்துத் |
| துறந்தானை உள்ளி, அழூஉம்; அவனை |
| மறந்தாள்போல் ஆலி நகூஉம்; மருளும்; |
10 | சிறந்த தன் நாணும் நலனும் நினையாது, |
| காமம் முனைஇயாள், அலந்தாள்' என்று, எனைக் காண, |
| நகான்மின்; கூறுவேன், மாக்காள்! மிகாஅது, |
| மகளிர் தோள் சேர்ந்த மாந்தர் துயர் கூர நீத்தலும், |
| நீள் சுரம் போகியார் வல்லை வந்து அளித்தலும், |
15 | ஊழ் செய்து, இரவும் பகலும்போல், வேறாகி, |
| வீழ்வார்கண் தோன்றும்; தடுமாற்றம் ஞாலத்துள் |
| வாழ்வார்கட்கு எல்லாம் வரும் |
| தாழ்பு, துறந்து, தொடி நெகிழ்த்தான் போகிய கானம் |
| இறந்து எரி நையாமல், பாஅய் முழங்கி |
20 | வறந்து என்னை செய்தியோ,வானம்? சிறந்த என் |
| கண்ணீர்க் கடலால், கனை துளி வீசாயோ, |
| கொண்மூக் குழீஇ முகந்து? |
| நுமக்கு எவன் போலுமோ? ஊரீர்! எமக்கும் எம் |
| கண்பாயல் கொண்டு, உள்ளாக் காதலவன் செய்த |
25 | பண்பு தர வந்த என் தொடர் நோய் வேது |
| கொள்வது போலும், கடும் பகல்? ஞாயிறே! |
| எல்லாக் கதிரும் பரப்பி, பகலொடு |
| செல்லாது நின்றீயல் வேண்டுவல்; நீ செல்லின், |
| புல்லென் மருள் மாலைப் போழ்து இன்று வந்து என்னைக் |
30 | கொல்லாது போதல் அரிதால்; அதனொடு யான் |
| செல்லாது நிற்றல் இலேன் |
| ஒல்லை எம் காதலர்க் கொண்டு, கடல் ஊர்ந்து, காலைநாள், |
| போதரின் காண்குவேன்மன்னோ பனியொடு |
| மாலைப் பகை தாங்கி, யான்? |
35 | இனியன் என்று ஓம்படுப்பல், ஞாயிறு! இனி |
| ஒள் வளை ஓடத் துறந்து, துயர் செய்த |
| கள்வன்பால் பட்டன்று, ஒளித்து என்னை, உள்ளி |
| பெருங் கடல் புல்லென, கானல் புலம்ப, |
| இருங் கழி நெய்தல் இதழ் பொதிந்து தோன்ற, |
40 | விரிந்து இலங்கு வெண் நிலா வீசும் பொழுதினான், |
| யான் வேண்டு ஒருவன், என் அல்லல் உறீஇயான்; |
| தான் வேண்டுபவரோடு துஞ்சும்கொல், துஞ்சாது? |
| வானும், நிலனும், திசையும், துழாவும் என் |
| ஆனாப் படர் மிக்க நெஞ்சு |
45 | ஊரவர்க்கு எல்லாம் பெரு நகை ஆகி, என் |
| ஆர் உயிர் எஞ்சும்மன்; அங்கு நீ சென்றீ |
| நிலவு உமிழ் வான் திங்காள்! ஆய் தொடி கொட்ப, |
| அளி புறம் மாறி, அருளான் துறந்த அக் |
| காதலன் செய்த கலக்குறு நோய்க்கு ஏதிலார் |
50 | எல்லாரும் தேற்றர், மருந்து |
| வினைக் கொண்டு என் காம நோய் நீக்கிய ஊரீர்! |
| எனைத்தானும் எள்ளினும், எள்ளலன், கேள்வன்; |
| நினைப்பினும், கண்ணுள்ளே தோன்றும்; அனைத்தற்கே |
| ஏமராது, ஏமரா ஆறு |
55 | கனை இருள் வானம்! கடல் முகந்து, என்மேல் |
| உறையொடு நின்றீயல் வேண்டும், ஒருங்கே |
| நிறை வளை கொட்பித்தான் செய்த துயரால் |
| இறை இறை பொத்திற்றுத் தீ |
| எனப் பாடி, |
60 | நோயுடை நெஞ்சத்து எறியா, இனைபு ஏங்கி, |
| 'யாவிரும் எம் கேள்வற் காணீரோ?' என்பவட்கு, |
| ஆர்வுற்ற பூசற்கு அறம்போல, ஏய்தந்தார்; |
| பாயல் கொண்டு உள்ளாதவரை வரக் கண்டு, |
| மாயவன் மார்பில் திருப்போல் அவள் சேர, |
65 | ஞாயிற்று முன்னர் இருள்போல மாய்ந்தது என் |
| ஆயிழை உற்ற துயர் |