| நிரை திமில் களிறாக, திரை ஒலி பறையாக, |
| கரை சேர் புள்ளினத்து அம் சிறை படையாக, |
| அரைசு கால் கிளர்ந்தன்ன உரவு நீர்ச் சேர்ப்ப! கேள்: |
| கற்பித்தான் நெஞ்சு அழுங்கப் பகர்ந்து உண்ணான், விச்சைக்கண் |
5 | தப்பித்தான் பொருளேபோல், தமியவே தேயுமால், |
| ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்; மற்று அவன் |
| எச்சத்துள் ஆயினும், அஃது எறியாது விடாதே காண் |
| கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள் |
| தாள் இலான் குடியே போல், தமியவே தேயுமால், |
10 | சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின்; மற்று அவன் |
| வாள் வாய் நன்று ஆயினும், அஃது எறியாது விடாதே காண் |
| ஆங்கு |
| அனைத்து, இனி பெரும! அதன் நிலை; நினைத்துக் காண்: |
| சினைஇய வேந்தன் எயிற்புறத்து இறுத்த |
15 | வினை வரு பருவரல் போல, |
| துணை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே |