| அயம் திகழ் நறுங் கொன்றை அலங்கல் அம் தெரியலான் |
| இயங்கு எயில் எயப் பிறந்த எரி போல, எவ்வாயும், |
| கனை கதிர் தெறுதலின், கடுத்து எழுந்த காம்புத் தீ |
| மலை பரந்து தலைக் கொண்டு முழங்கிய முழங்கு அழல் |
5 | மயங்கு அதர் மறுகலின், மலை தலைக் கொண்டென, |
| விசும்பு உற நிவந்து அழலும், விலங்கு அரு, வெஞ் சுரம் |
| இறந்து தாம் எண்ணிய எய்துதல் வேட்கையால், |
| அறம் துறந்து ஆயிழாய்! ஆக்கத்தில் பிரிந்தவர் |
| பிறங்கு நீர் சடைக் கரந்தான் அணி அன்ன நின் நிறம் |
10 | பசந்து, நீ இனையையாய், நீத்தலும் நீப்பவோ? |
| கரி காய்ந்த கவலைத்தாய், கல் காய்ந்த காட்டகம், |
| 'வெரு வந்த ஆறு' என்னார், விழுப் பொருட்கு அகன்றவர், |
| உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கன்ன, நின் |
| உரு இழந்து இனையையாய், உள்ளலும் உள்ளுபவோ? |
15 | கொதித்து உராய்க் குன்று இவர்ந்து, கொடிக் கொண்ட கோடையால், |
| 'ஒதுக்கு அரிய நெறி' என்னார், ஒண் பொருட்கு அகன்றவர், |
| புதுத் திங்கட் கண்ணியான் பொன் பூண் ஞான்று அன்ன, நின் |
| கதுப்பு உலறும் கவினையாய், காண்டலும் காண்பவோ? |
| ஆங்கு |
20 | அரும் பெறல் ஆதிரையான் அணி பெற மலர்ந்த |
| பெருந் தண் சண்பகம் போல, ஒருங்கு அவர் |
| பொய்யார் ஆகுதல் தெளிந்தனம் |
| மை ஈர் ஓதி மட மொழியோயே! |