| பாடு இன்றிப் பசந்த கண் பைதல பனி மல்க, |
| வாடுபு வனப்பு ஓடி வணங்கு இறை வளை ஊர, |
| ஆடு எழில் அழிவு அஞ்சாது, அகன்றவர்திறத்து, இனி |
| நாடுங்கால், நினைப்பது ஒன்று உடையேன்மன்? அதுவும்தான் |
5 | தொல் நலம் தொலைபு, ஈங்கு, யாம் துயர் உழப்பத் துறந்து, உள்ளார், |
| துன்னி, நம் காதலர், துறந்து ஏகும் ஆர் இடை, |
| 'கல்மிசை உருப்பு அறக் கனை துளி சிதறு!' என, |
| இன் இசை எழிலியை இரப்பவும் இயைவதோ? |
| புனையிழாய்! ஈங்கு நாம் புலம்புற, பொருள் வெஃகி, |
10 | முனை என்னார் காதலர் முன்னிய ஆர் இடை, |
| ‘சினை வாடச் சிறக்கும் நின் சினம் தணிந்தீக!’ என, |
| கனை கதிர்க் கனலியைக் காமுறல் இயைவதோ? |
| ஒளியிழாய்! ஈங்கு நாம் துயர் கூர, பொருள்வயின், |
| அளி ஒரீஇக் காதலர் அகன்று ஏகும் ஆர் இடை, |
15 | ‘முளி முதல் மூழ்கிய வெம்மை தீர்ந்து உறுக!’ என, |
| வளி தரும் செல்வனை வாழ்த்தவும் இயைவதோ? |
| என ஆங்கு, |
| செய் பொருட் சிறப்பு எண்ணிச் செல்வார்மாட்டு, இனையன |
| தெய்வத்துத் திறன் நோக்கி, தெருமரல் தேமொழி! |
20 | ‘வறன் ஓடின் வையகத்து வான் தரும் கற்பினாள் |
| நிறன் ஓடிப் பசப்பு ஊர்தல் உண்டு’ என, |
| அறன் ஓடி விலங்கின்று, அவர் ஆள்வினைத் திறத்தே |