|
19 | தோழி கூற்று
| | | செவ்விய தீவிய சொல்லி, அவற்றொடு | | பைய முயங்கிய அஞ்ஞான்று, அவை எல்லாம் | | பொய்யாதல் யான் யாங்கு அறிகோ மற்று? ஐய! | | அகல் நகர் கொள்ளா அலர் தலைத் தந்து, | 5 | பகல் முனி வெஞ் சுரம் உள்ளல் அறிந்தேன்; | | மகன் அல்லை மன்ற, இனி | | செல்; இனிச் சென்று நீ செய்யும் வினை முற்றி, | | அன்பு அற மாறி, 'யாம் உள்ளத் துறந்தவள் | | பண்பும் அறிதிரோ?' என்று, வருவாரை | 10 | என் திறம் யாதும் வினவல்; வினவின், | | பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய, | | தவல் அருஞ் செய் வினை முற்றாமல், ஆண்டு ஓர் | | அவலம் படுதலும் உண்டு |
| | பிரிவு உணர்த்தப்பட்ட தோழி செலவு விலக்கவும், பிரிவின்மேல் சென்ற உள்ளத்தன் ஆயினானை, 'நீ பிரியின், இவள் இறந்துபடும்' எனச் சொல்லிய வாய்பாட்டான் மறுத்தது. |
|
|
|