| தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக, |
| அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின், |
| மடங்கல் போல், சினைஇ, மாயம் செய் அவுணரைக் |
| கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூஎயிலும் |
5 | உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின், |
| சீறு அருங் கணிச்சியோன் சினவலின் அவ் எயில் |
| ஏறு பெற்று உதிர்வன போல், வரை பிளந்து, இயங்குநர் |
| ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆர் இடை |
| மறப்பு அருங் காதல் இவள் ஈண்டு ஒழிய, |
10 | இறப்பத் துணிந்தனிர், கேண்மின் மற்று ஐஇய! |
| ‘தொலைவு ஆகி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு’ என, |
| மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ |
| நிலைஇய கற்பினாள், நீ நீப்பின் வாழாதாள், |
| முலை ஆகம் பிரியாமை பொருளாயின் அல்லதை? |
15 | ‘இல் என, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு’ என, |
| கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ |
| தொல் இயல் வழாஅமைத் துணை எனப் புணர்ந்தவள் |
| புல் ஆகம் பிரியாமை பொருளாயின் அல்லதை? |
| ‘இடன் இன்றி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு’ என, |
20 | கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ |
| வடமீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள் |
| தட மென் தோள் பிரியாமை பொருளாயின் அல்லதை? |
| என, இவள் |
| புன் கண் கொண்டு இனையவும், பொருள்வயின் அகறல் |
25 | அன்பு அன்று, என்று யான் கூற, அன்புற்று, |
| காழ் வரை நில்லாக் கடுங் களிற்று ஒருத்தல் |
| யாழ் வரைத் தங்கியாங்கு, தாழ்பு, நின் |
| தொல் கவின் தொலைதல் அஞ்சி, என் |
| சொல் வரைத் தங்கினர், காதலோரே |