22
தோழி கூற்று

உண் கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும், தாம்
கொண்டது கொடுக்குங்கால் முகனும், வேறாகுதல்
பண்டும் இவ் உலகத்து இயற்கை; அஃது இன்றும்
புதுவது அன்றே புலனுடை மாந்திர்!
5தாய் உயிர் பெய்த பாவை போல,
நலன் உடையார் மொழிக்கண் தாவார்; தாம் தம் நலம்
தாது தேர் பறவையின் அருந்து, இறல் கொடுக்குங்கால்,
ஏதிலார் கூறுவது எவனோ, நின் பொருள் வேட்கை?
நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த
10செறி முறை பாராட்டினாய்; மற்று, எம் பல்லின்
பறி முறை பாராட்டினையோ? ஐய!
நெய் இடை நீவி மணி ஒளி விட்டன்ன
ஐவகை பாராட்டினாய்; மற்று, எம் கூந்தல்
செய்வினை பாராட்டினையோ? ஐய!
15குளன் அணி தாமரைப் பாசரும்பு ஏய்க்கும்
இள முலை பாராட்டினாய்; மற்று, எம் மார்பில்
தளர் முலை பாராட்டினையோ? ஐய!
என ஆங்கு,
அடர் பொன் அவிர் ஏய்க்கும் அவ் வரி வாட,
20சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எங்கண்
படர் கூற நின்றதும் உண்டோ? தொடர் கூர,
துவ்வாமை வந்தக்கடை?

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, அதற்கு உடம்படாது, தலைமகனை நெருங்கி, களவுக் காலத்து ஒழுக்கம் எடுத்துக் காட்டி ஆற்றுவித்து, உடம்பட்ட வாய்பாட்டான் மறுத்தது