| உண் கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும், தாம் |
| கொண்டது கொடுக்குங்கால் முகனும், வேறாகுதல் |
| பண்டும் இவ் உலகத்து இயற்கை; அஃது இன்றும் |
| புதுவது அன்றே புலனுடை மாந்திர்! |
5 | தாய் உயிர் பெய்த பாவை போல, |
| நலன் உடையார் மொழிக்கண் தாவார்; தாம் தம் நலம் |
| தாது தேர் பறவையின் அருந்து, இறல் கொடுக்குங்கால், |
| ஏதிலார் கூறுவது எவனோ, நின் பொருள் வேட்கை? |
| நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த |
10 | செறி முறை பாராட்டினாய்; மற்று, எம் பல்லின் |
| பறி முறை பாராட்டினையோ? ஐய! |
| நெய் இடை நீவி மணி ஒளி விட்டன்ன |
| ஐவகை பாராட்டினாய்; மற்று, எம் கூந்தல் |
| செய்வினை பாராட்டினையோ? ஐய! |
15 | குளன் அணி தாமரைப் பாசரும்பு ஏய்க்கும் |
| இள முலை பாராட்டினாய்; மற்று, எம் மார்பில் |
| தளர் முலை பாராட்டினையோ? ஐய! |
| என ஆங்கு, |
| அடர் பொன் அவிர் ஏய்க்கும் அவ் வரி வாட, |
20 | சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எங்கண் |
| படர் கூற நின்றதும் உண்டோ? தொடர் கூர, |
| துவ்வாமை வந்தக்கடை? |