| ‘தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின், |
| அல்லாந்தார் அலவுற ஈன்றவள் கிடக்கை போல், |
| பல் பயம் உதவிய பசுமை தீர் அகல் ஞாலம் |
| புல்லிய புனிறு ஒரீஇப் புது நலம் ஏர்தர; |
5 | வளையவர் வண்டல் போல், வார் மணல் வடுக் கொள; |
| இளையவர் ஐம்பால் போல், எக்கர் போழ்ந்து அறல் வார; |
| மா ஈன்ற தளிர்மிசை, மாயவள் திதலை போல், |
| ஆய் இதழ்ப் பல் மலர் ஐய கொங்கு உறைத்தர; |
| மே தக இளவேனில் இறுத்தந்த பொழுதின்கண் |
10 | சேயார்கண் சென்ற என் நெஞ்சினை சின்மொழி! |
| நீ கூறும் வரைத்து அன்றி, நிறுப்பென்மன்? நிறை நீவி, |
| வாய் விரிபு பனி ஏற்ற விரவுப் பல் மலர் தீண்டி, |
| நோய் சேர்ந்த வைகலான், வாடை வந்து அலைத்தரூஉம் |
| போழ்து உள்ளார் துறந்தார்கண் புரி வாடும் கொள்கையைச் |
15 | சூழ்பு ஆங்கே சுடரிழாய்! கரப்பென்மன்? கைநீவி |
| வீழ் கதிர் விடுத்த பூ விருந்து உண்ணும் இருந் தும்பி |
| யாழ் கொண்ட இமிழ் இசை இயல் மாலை அலைத்தரூஉம் |
| தொடி நிலை நெகிழ்த்தார்கண் தோயும் என் ஆர் உயிர் |
| வடு நீங்கு கிளவியாய்! வலிப்பென்மன்? வலிப்பவும், |
20 | நெடு நிலா, திறந்து உண்ண, நிரை இதழ் வாய் விட்ட |
| கடி மலர் கமழ் நாற்றம், கங்குல் வந்து, அலைத்தரூஉம்’ |
| என ஆங்கு, |
| வருந்தினை வதிந்த நின் வளை நீங்க, சேய் நாட்டுப் |
| பிரிந்து செய் பொருட் பிணி பின் நோக்காது ஏகி, நம் |
25 | அருந் துயர் களைஞர் வந்தனர் |
| திருந்து எயிறு இலங்கு நின் தே மொழி படர்ந்தே |