3
தோழி கூற்று

அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும்,
வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும்
இறை நில்லா வளை ஓட, இதழ் சோர்பு பனி மல்க,
பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள்
5 விறல் நலன் இழப்பவும், வினை வேட்டாய்! கேஎள், இனி:
‘உடை இவள் உயிர் வாழாள், நீ நீப்பின்’ என, பல
இடைகொண்டு யாம் இரப்பவும், எம கொள்ளாய்ஆயினை;
கடைஇய ஆற்றிடை, நீர் நீத்த வறுஞ் சுனை,
அடையொடு வாடிய அணி மலர் தகைப்பன
10 ‘வல்லை நீ துறப்பாயேல், வகை வாடும் இவள்’ என,
ஒல் ஆங்கு யாம் இரப்பவும், உணர்ந்தீயாய் ஆயினை;
செல்லு நீள் ஆற்றிடை, சேர்ந்து எழுந்த மரம் வாட,
புல்லு விட்டு இறைஞ்சிய பூங்கொடி தகைப்பன
‘பிணிபு நீ விடல் சூழின், பிறழ்தரும் இவள்’ என,
15 பணிபு வந்து இரப்பவும், பல சூழ்வாய்ஆயினை;
துணிபு நீ செலக் கண்ட ஆற்றிடை, அம் மரத்து
அணி செல, வாடிய அம் தளிர் தகைப்பன
என ஆங்கு
யாம் நிற் கூறவும் எம கொள்ளாய்ஆயினை;
20 ஆனாது இவள்போல் அருள் வந்தவை காட்டி,
மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல், நீ செல்லும்
கானம் தகைப்ப, செலவு

தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகட்கு அஃது உரைத்து,அவளது ஆற்றாமையின் வகை தலைமகற்கு உணர்த்தவும், பின்னும் பிரிவின்மேல் சென்ற உள்ளத்தன் ஆயினானை, ‘நீர் செல்லும் கானமே நும்மை இடிக்கும் கேளிர்போல விலக்கும்’ என, அவன் செலவழுங்கும் வகை அவள் கூறியது (2)