| அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும், |
| வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும் |
| இறை நில்லா வளை ஓட, இதழ் சோர்பு பனி மல்க, |
| பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள் |
5 | விறல் நலன் இழப்பவும், வினை வேட்டாய்! கேஎள், இனி: |
| ‘உடை இவள் உயிர் வாழாள், நீ நீப்பின்’ என, பல |
| இடைகொண்டு யாம் இரப்பவும், எம கொள்ளாய்ஆயினை; |
| கடைஇய ஆற்றிடை, நீர் நீத்த வறுஞ் சுனை, |
| அடையொடு வாடிய அணி மலர் தகைப்பன |
10 | ‘வல்லை நீ துறப்பாயேல், வகை வாடும் இவள்’ என, |
| ஒல் ஆங்கு யாம் இரப்பவும், உணர்ந்தீயாய் ஆயினை; |
| செல்லு நீள் ஆற்றிடை, சேர்ந்து எழுந்த மரம் வாட, |
| புல்லு விட்டு இறைஞ்சிய பூங்கொடி தகைப்பன |
| ‘பிணிபு நீ விடல் சூழின், பிறழ்தரும் இவள்’ என, |
15 | பணிபு வந்து இரப்பவும், பல சூழ்வாய்ஆயினை; |
| துணிபு நீ செலக் கண்ட ஆற்றிடை, அம் மரத்து |
| அணி செல, வாடிய அம் தளிர் தகைப்பன |
| என ஆங்கு |
| யாம் நிற் கூறவும் எம கொள்ளாய்ஆயினை; |
20 | ஆனாது இவள்போல் அருள் வந்தவை காட்டி, |
| மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல், நீ செல்லும் |
| கானம் தகைப்ப, செலவு |