| ‘கடும் புனல் கால் பட்டுக் கலுழ் தேறிக் கவின் பெற, |
| நெடுங் கயத்து அயல் அயல் அயிர் தோன்ற, அம் மணல் |
| வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உக, |
| பிரிந்தவர் நுதல் போலப் பீர் வீய, காதலர்ப் |
5 | புணர்ந்தவர் முகம் போலப் பொய்கை பூப் புதிது ஈன, |
| மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால், |
| கையாறு கடைக்கூட்டக் கலக்குறூஉம் பொழுதுமன் |
| "பொய்யேம்" என்று, ஆயிழாய்! புணர்ந்தவர் உரைத்ததை |
| மயங்கு அமர் மாறு அட்டு, மண் வௌவி வருபவர், |
10 | தயங்கிய களிற்றின்மேல், தகை காண விடுவதோ |
| பயங் கெழு பல் கதிர் பால் போலும் பொழுதொடு, |
| வயங்கு இழை தண்ணென, வந்த இவ் அசை வாடை? |
| தாள் வலம்பட வென்று, தகை நன் மா மேல்கொண்டு, |
| வாள் வென்று வருபவர் வனப்பு ஆர விடுவதோ |
15 | நீள் கழை நிவந்த பூ நிறம் வாடத் தூற்றுபு, |
| தோள் அதிர்பு அகம் சேர, துவற்றும் இச் சில் மழை? |
| பகை வென்று திறை கொண்ட பாய் திண் தேர் மிசையவர் |
| வகை கொண்ட செம்மல் நாம் வனப்பு ஆர விடுவதோ |
| புகை எனப் புதல் சூழ்ந்து, பூ அம் கள் பொதி செய்யா |
20 | முகை வெண் பல் நுதி பொர, முற்றிய கடும் பனி?' |
| என ஆங்கு, |
| வாளாதி, வயங்கிழாய்! ‘வருந்துவள் இவள்’ என, |
| நாள் வரை நிறுத்துத் தாம் சொல்லிய பொய் அன்றி, |
| மீளி வேல் தானையர் புகுதந்தார் |
25 | நீள் உயர் கூடல் நெடுங் கொடி எழவே |