| ‘மடியிலான் செல்வம் போல் மரன் நந்த, அச் செல்வம் |
| படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப; |
| மாயவள் மேனி போல் தளிர் ஈன, அம் மேனித் |
| தாய சுணங்கு போல் தளிர்மிசைத் தாது உக; |
5 | மலர் தாய பொழில் நண்ணி மணி நீர கயம் நிற்ப, |
| அலர் தாய துறை நண்ணி அயிர் வரித்து அறல் வார; |
| நனி எள்ளும் குயில் நோக்கி இனைபு உகு நெஞ்சத்தால், |
| துறந்து உள்ளார் அவர்’ எனத் துனி கொள்ளல் எல்லா! நீ |
| ‘வண்ண வண்டு இமிர்ந்து, ஆனா வையை வார் உயர் எக்கர், |
10 | தண் அருவி நறு முல்லைத் தாது உண்ணும் பொழுதன்றோ |
| கண் நிலா நீர் மல்கக் கவவி, நாம் விடுத்தக்கால், |
| ஒண்ணுதால்! நமக்கு அவர் "வருதும்" என்று உரைத்ததை? |
| மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்து, அவர், |
| வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ |
15 | "வலன் ஆக, வினை!" என்று வணங்கி, நாம் விடுத்தக்கால், |
| ஒளியிழாய்! நமக்கு அவர் "வருதும்" என்று உரைத்ததை? |
| நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாடக் கூடலார் |
| புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ |
| பல நாடு நெஞ்சினேம் பரிந்து, நாம் விடுத்தக்கால், |
20 | சுடரிழாய்! நமக்கு அவர் "வருதும்" என்று உரைத்ததை? |
| என ஆங்கு, |
| உள்ளுதொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பாகி, |
| எள் அறு காதலர் இயைதந்தார் புள் இயல் |
| காமர் கடுந் திண் தேர்ப் பொருப்பன் |
25 | வாய்மை அன்ன வைகலொடு புணர்ந்தே |