| ‘கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல், மராத்து |
| நெடுமிசைச் சூழும் மயில் ஆலும் சீர, |
| வடி நரம்பு இசைப்ப போல் வண்டொடு சுரும்பு ஆர்ப்ப, |
| தொடி மகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர, |
5 | இயன் எழீஇயவை போல, எவ் வாயும் இம்மென, |
| கயன் அணி பொதும்பருள் கடி மலர்த் தேன் ஊத, |
| மலர் ஆய்ந்து வயின் வயின் விளிப்ப போல் மரன் ஊழ்ப்ப, |
| இருங் குயில் ஆல, பெருந் துறை கவின் பெற, |
| குழவி வேனில் விழவு எதிர்கொள்ளும் |
10 | சீரார் செவ்வியும், வந்தன்று; |
| வாரார், தோழி! நம் காதலோரே |
| பாஅய்ப் பாஅய்ப் பசந்தன்று, நுதல்; |
| சாஅய்ச் சாஅய் நெகிழ்ந்தன, தோள் |
| நனி அறல் வாரும் பொழுது என, வெய்ய |
15 | பனி அறல் வாரும், என் கண் |
| மலையிடைப் போயினர் வரல் நசைஇ, நோயொடு |
| முலையிடைக் கனலும், என் நெஞ்சு |
| காதலின் பிரிந்தார்கொல்லோ? வறிது, ஓர் |
| தூதொடு மறந்தார்கொல்லோ? நோதக, |
20 | காதலர் காதலும் காண்பாம்கொல்லோ? |
| துறந்தவர் ஆண்டு ஆண்டு உறைகுவர்கொல்லோ? யாவது?' |
| "நீள் இடைப் படுதலும் ஒல்லும்; யாழ நின், |
| வாள் இடைப்படுத்த வயங்கு ஈர் ஓதி! |
| நாள் அணி சிதைத்தலும் உண்டு" என நய வந்து, |
25 | கேள்வி அந்தணர் கடவும் |
| வேள்வி ஆவியின் உயிர்க்கும், என் நெஞ்சே’ |