37
தோழி கூற்று

கய மலர் உண்கண்ணாய்! காணாய்: ஒருவன்
வய மான் அடித் தேர்வான் போல, தொடை மாண்ட
கண்ணியன் வில்லன், வரும்; என்னை நோக்குபு,
முன்னத்தின் காட்டுதல் அல்லது, தான் உற்ற
5நோய் உரைக்கல்லான் பெயரும்மன், பல் நாளும்;
பாயல் பெறேஎன், படர் கூர்ந்து, அவன்வயின்
சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக்
கண் நின்று கூறுதல் ஆற்றான், அவனாயின்;
பெண் அன்று, உரைத்தல், நமக்காயின்; ‘இன்னதூஉம்
10காணான் கழிதலும் உண்டு' என்று, ஒரு நாள், என்
தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து, ஓர்
நாண் இன்மை செய்தேன்: நறுநுதால்! ஏனல்
இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல்,
ஊசல் ஊர்ந்து ஆட, ஒரு ஞான்று வந்தானை,
15‘ஐய! சிறிது என்னை ஊக்கி’ எனக் கூற,
‘தையால்! நன்று! என்று அவன் ஊக்க, கை நெகிழ்பு
பொய்யாக வீழ்ந்தேன், அவன் மார்பின்; வாயாச் செத்து,
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்; மேல்
மெய் அறியாதேன் போல் கிடந்தேன்மன்; ஆயிடை
20மெய் அறிந்து ஏற்று எழுவேனாயின், மற்று ஒய்யென,
‘ஒண்குழாய்! செல்க’ எனக் கூறி விடும் பண்பின்
அங்கண் உடையன் அவன்

‘நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும், செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும், புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம், உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை,’ தன்னை அவள் மறையாமை காரணமாக, ‘மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது, பல் வேறு கவர் பொருள் நாட்டத்தான்’ தலைமகட்குத் தோழி கூறியது(1)