| வலி முன்பின், வல்லென்ற யாக்கை, புலி நோக்கின் |
| சுற்றமை வில்லர், சுரி வளர் பித்தையர், |
| அற்றம் பார்த்து அல்கும் கடுங்கண் மறவர் தாம் |
| கொள்ளும் பொருள் இலர்ஆயினும், வம்பலர் |
5 | துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து, உயிர் வௌவலின், |
| புள்ளும் வழங்காப் புலம்பு கொள் ஆர் இடை, |
| வெள் வேல் வலத்திர் பொருள் தரல் வேட்கையின், |
| உள்ளினிர் என்பது அறிந்தனள், என் தோழி |
| ‘காழ் விரி கவை ஆரம் மீ வரும் இள முலை |
10 | போழ்து இடைப்படாஅமல் முயங்கியும் அமையார், என் |
| தாழ் கதுப்பு அணிகுவர், காதலர்; மற்று, அவர் |
| சூழ்வதை எவன்கொல்? அறியேன்!’ என்னும் |
| ‘முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரைக் |
| கள்ளினும் மகிழ்செயும் என உரைத்தும் அமையார், என் |
15 | ஒள் இழை திருத்துவர், காதலர்; மற்று, அவர் |
| உள்ளுவது எவன்கொல்? அறியேன்!’ என்னும் |
| ‘நுண் எழில் மாமைச் சுணங்கு அணி ஆகம் தம் |
| கண்ணொடு தொடுத்தென நோக்கியும் அமையார், என் |
| ஒள் நுதல் நீவுவர், காதலர்; மற்று, அவர் |
20 | எண்ணுவது எவன்கொல்? அறியேன்!’ என்னும் |
| என ஆங்கு, |
| ‘கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து’ என, என் தோழி |
| அழிவொடு கலங்கிய எவ்வத்தள்; ஒரு நாள், நீர், |
| பொழுது இடைப்பட நீப்பின், வாழ்வாளோ? |
25 | ஒழிக இனி, பெரும! நின் பொருட் பிணிச் செலவே |