| வள்ளைப் பாட்டுப் பாடத் தோழி அழைக்க, தலைவி இசைதல்
|
| ‘மறம் கொள் இரும் புலித் தொல் முரண் தொலைத்த |
| முறம்செவி வாரணம் முன் குளகு அருந்தி, |
| கறங்கு வெள் அருவி ஓலின் துஞ்சும் |
| பிறங்கு இருஞ் சோலை நல் மலை நாடன் |
5 | மறந்தான்; மறக்க, இனி; எல்லா! நமக்குச் |
| சிறந்தமை நாம் நன்கு அறிந்தனம், ஆயின்; அவன் திறம், |
| கொல் யானைக் கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம், |
| வள்ளை அகவுவம், வா’ ‘இகுளை! நாம் |
| வள்ளை அகவுவம், வா’ |
| தோழி இயற்பழித்தல் |
10 | காணிய வா வாழி, தோழி! வரைத் தாழ்பு |
| வாள் நிறம் கொண்ட அருவித்தே, நம் அருளா |
| நாணிலி நாட்டு மலை |
| தலைவி இயற்பட மொழிதல்
|
| ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ |
| ஓர்வு உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல் |
15 | அறம் புரி நெஞ்சத்தவன்? |
| தோழி
|
| தண் நறுங் கோங்கம் மலர்ந்த வரையெல்லாம் |
| பொன் அணி யானை போல் தோன்றுமே நம் அருளாக் |
| கொன்னாளன் நாட்டு மலை |
| தலைவி
|
| கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ? தன் மலை |
20 | நீரினும் சாயல் உடையன், நயந்தோர்க்குத் |
| தேர் ஈயும் வண் கையவன் |
| தோழி
|
| வரைமிசை மேல் தொடுத்த நெய்க் கண் இறாஅல் |
| மழை நுழை திங்கள் போல் தோன்றும் இழை நெகிழ |
| எவ்வம் உறீஇயினான் குன்று |
| தலைவி
|
25 | எஞ்சாது, எல்லா! கொடுமை நுவலாதி |
| அஞ்சுவது அஞ்சா அறனிலி அல்லன், என் |
| நெஞ்சம் பிணிக்கொண்டவன் |
| என்று யாம் பாட, மறை நின்று கேட்டனன், |
| தாழ் இருங் கூந்தல் என் தோழியைக் கை கவியா, |
30 | சாயல் இன் மார்பன் சிறு புறம் சார்தர, |
| ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது, என் |
| ஆயிழை மேனிப் பசப்பு |