| தோழி வள்ளைப் பாட்டுப் பாடத் தலைவியை அழைத்தல்
|
| வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து |
| ஏந்து மருப்பின், இன வண்டு இமிர்பு ஊதும் |
| சாந்த மரத்தின், இயன்ற உலக்கையால், |
| ஐவன வெண் நெல் அறை உரலுள் பெய்து, இருவாம், |
5 | ஐயனை ஏத்துவாம் போல, அணிபெற்ற |
| மை படு சென்னிப் பய மலை நாடனை, |
| தையலாய்! பாடுவாம், நாம் |
| தோழியின் பாடல்
|
| தகையவர் கைச் செறித்த தாள்போல, காந்தள் |
| முகையின்மேல் தும்பி இருக்கும் பகை எனின், |
10 | கூற்றம் வரினும் தொலையான், தன் நட்டார்க்குத் |
| தோற்றலை நாணாதோன் குன்று |
| தலைவியைப் பாடுமாறு தோழி வேண்டுதல்
|
| வெருள்பு உடன் நோக்கி, வியல் அறை யூகம், |
| இருள் தூங்கு இறு வரை ஊர்பு இழிபு ஆடும் |
| வருடைமான் குழவிய வள மலை நாடனைத் |
15 | தெருள தெரியிழாய்! நீ ஒன்று பாடித்தை |
| தலைவி
|
| நுண் பொறி மான் செவி போல, வெதிர் முளைக் |
| கண் பொதி பாளை கழன்று உகும் பண்பிற்றே |
| மாறு கொண்டு ஆற்றார்எனினும், பிறர் குற்றம் |
| கூறுதல் தேற்றாதோன் குன்று |
| தோழி
|
20 | புணர் நிலை வளகின் குளகு அமர்ந்து உண்ட |
| புணர் மருப்பு எழில் கொண்ட வரை புரை செலவின் |
| வயங்கு எழில் யானைப் பய மலை நாடனை |
| மணம் நாறு கதுப்பினாய்! மறுத்து ஒன்று பாடித்தை |
| தலைவி
|
| கடுங் கண் உழுவை அடி போல வாழைக் |
25 | கொடுங் காய் குலைதொறூஉம் தூங்கும் இடும்பையால் |
| இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றாக்கால், |
| தன் மெய் துறப்பான் மலை |
| தோழி
|
| என ஆங்கு |
| கூடி அவர் திறம் பாட, என் தோழிக்கு |
30 | வாடிய மென் தோளும் வீங்கின |
| ஆடு அமை வெற்பன் அளித்தக்கால் போன்றே |