| விடியல் வெங் கதிர் காயும் வேய் அமல் அகல் அறை, |
| கடி சுனை கவினிய காந்தள் அம் குலையினை, |
| அரும் மணி அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்து, |
| பெரும் மலை மிளிர்ப்பன்ன காற்றுடைக் கனை பெயல் |
5 | உருமுக் கண்ணுறுதலின், உயர் குரல் ஒலி ஓடி, |
| நறு வீய நனஞ் சாரல் சிலம்பலின், கதுமென, |
| சிறுகுடி துயில் எழூஉம் சேண் உயர் விறல் வெற்ப! |
| கால் பொர நுடங்கல கறங்கு இசை அருவி நின் |
| மால் வரை மலி சுனை மலர் ஏய்க்கும் என்பதோ |
10 | புல் ஆராப் புணர்ச்சியால் புலம்பிய என் தோழி |
| பல் இதழ் மலர் உண்கண் பசப்ப, நீ சிதைத்ததை? |
| புகர் முகக் களிறொடு புலி பொருது உழக்கும் நின் |
| அகல் மலை அடுக்கத்த அமை ஏய்க்கும் என்பதோ |
| கடை எனக் கலுழும் நோய் கைம்மிக, என் தோழி |
15 | தடையின திரண்ட தோள் தகை வாட, சிதைத்ததை? |
| சுடர் உற உற நீண்ட சுரும்பு இமிர் அடுக்கத்த |
| விடர் வரை எரி வேங்கை இணர் ஏய்க்கும் என்பதோ? |
| யாமத்தும் துயிலலள் அலமரும் என் தோழி |
| காமரு நல் எழில் கவின் வாட, சிதைத்ததை? |
20 | என ஆங்கு, |
| தன் தீமை பல கூறிக் கழறலின், என் தோழி |
| மறையில் தான் மருவுற மணந்த நட்பு அருகலான், |
| பிறை புரை நுதல்! அவர்ப் பேணி நம் |
| உறை வரைந்தனர், அவர் உவக்கும் நாளே |