| ஆம் இழி அணி மலை அலர் வேங்கைத் தகை போல, |
| தே மூசு, நனை கவுள், திசை காவல் கொளற்கு ஒத்த, |
| வாய் நில்லா வலி முன்பின், வண்டு ஊது புகர் முகப் |
| படு மழை அடுக்கத்த, மா விசும்பு ஓங்கிய, |
5 | கடி மரத் துருத்திய, கமழ் கடாம் திகழ்தரும் |
| பெருங் களிற்றினத்தொடு, வீங்கு எருத்து எறுழ் முன்பின் |
| இரும் புலி மயக்குற்ற இகல் மலை நல் நாட! |
| வீழ்பெயற் கங்குலின் விளி ஓர்த்த ஒடுக்கத்தால், |
| வாழும் நாள் சிறந்தவள் வருந்து தோள் தவறு உண்டோ |
10 | தாழ் செறி கடுங் காப்பின் தாய் முன்னர், நின் சாரல் |
| ஊழ் உறு கோடல் போல், எல் வளை உகுபவால்? |
| இனைஇருள் இது என ஏங்கி, நின் வரல் நசைஇ, |
| நினை துயர் உழப்பவள் பாடு இல் கண் பழி உண்டோ |
| ‘இனையள்’ என்று எடுத்து அரற்றும் அயல் முன்னர், நின் சுனைக் |
15 | கனை பெயல் நீலம் போல், கண் பனி கலுழ்பவால்? |
| பல் நாளும் படர், அட பசலையால் உணப்பட்டாள், |
| பொன் உரை மணி அன்ன, மாமைக்கண் பழி உண்டோ |
| இன் நுரைச் செதும்பு அரற்றும் செவ்வியுள், நின் சோலை |
| மின் உகு தளிர் அன்ன, மெலிவு வந்து உரைப்பதால்? |
20 | என ஆங்கு |
| பின் ஈதல் வேண்டும், நீ பிரிந்தோள் நட்பு என நீவிப் |
| பூங் கண் படுதலும் அஞ்சுவல்; தாங்கிய |
| அருந் துயர் அவலம் தூக்கின், |
| மருங்கு அறிவாரா மலையினும் பெரிதே |