| பாஅல் அம் செவிப் பணைத் தாள் மா நிரை |
| மாஅல் யானையொடு மறவர் மயங்கித் |
| தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அருஞ் சுரம் |
| இறந்து, நீர் செய்யும் பொருளினும், யாம் நுமக்குச் |
5 | சிறந்தனம் ஆதல் அறிந்தனிர்ஆயின், |
| நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின் |
| ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதை, |
| கேள் பெருந் தகையோடு எவன் பல மொழிகுவம்? |
| நாளும் கோள் மீன் தகைத்தலும் தகைமே |
10 | கல்லெனக் கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின், |
| புல்லென்ற களம் போலப் புலம்பு கொண்டு, அமைவாளோ? |
| ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடு போல், |
| பாழ்பட்ட முகத்தோடு, பைதல் கொண்டு, அமைவாளோ? |
| ஓர் இரா வைகலுள், தாமரைப் பொய்கையுள் |
15 | நீர் நீத்த மலர் போல, நீ நீப்பின், வாழ்வாளோ? |
| என ஆங்கு |
| பொய்ந் நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு, |
| எந் நாளோ, நெடுந் தகாய்! நீ செல்வது, |
| அந் நாள் கொண்டு இறக்கும், இவள் அரும் பெறல் உயிரே |