| வாங்குகோல் நெல்லொடு வாங்கி, வருவைகல், |
| மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி, |
| தூங்கு இலை வாழை நளி புக்கு, ஞாங்கர் |
| வருடை மட மறி ஊர்வு இடைத் துஞ்சும் |
5 | இருள் தூங்கு சோலை, இலங்கு நீர், வெற்ப! |
| அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த |
| உரவு வில்மேல் அசைத்த கையை, ஓராங்கு |
| நிரைவளை முன்கை என் தோழியை நோக்கி, |
| படி கிளி பாயும் பசுங் குரல் ஏனல் |
10 | கடிதல் மறப்பித்தாய்ஆயின், இனி நீ |
| நெடிது உள்ளல் ஓம்புதல் வேண்டும்; இவளே |
| பல் கோட் பலவின் பயிர்ப்பு உறு தீம் கனி |
| அல்கு அறைக் கொண்டு ஊண் அமலைச் சிறுகுடி |
| நல்கூர்ந்தார் செல்வ மகள் |
15 | நீயே, வளியின் இகல் மிகும் தேரும், களிறும் |
| தளியின் சிறந்தனை வந்த புலவர்க்கு |
| அளியொடு கைதூவலை |
| அதனால், |
| கடு மா கடவுறூஉம் கோல் போல், எனைத்தும் |
20 | கொடுமை இலையாவது அறிந்தும், அடுப்பல் |
| வழை வளர் சாரல் வருடை நன் மான் |
| குழவி வளர்ப்பவர் போல, பாராட்டி, |
| உழையின் பிரியின், பிரியும், |
| இழை அணி அல்குல் என் தோழியது கவினே |