| ஊர்க்கால் நிவந்த பொதும்பருள், நீர்க் கால், |
| கொழு நிழல் ஞாழல் முதிர் இணர் கொண்டு, |
| கழும முடித்து, கண் கூடு கூழை |
| சுவல்மிசைத் தாதொடு தாழ, அகல் மதி |
5 | தீம் கதிர் விட்டது போல, முகன் அமர்ந்து, |
| ஈங்கே வருவாள் இவள் யார் கொல்? ஆங்கே, ஓர் |
| வல்லவன் தைஇய பாவைகொல்? நல்லார் |
| உறுப்பு எலாம் கொண்டு, இயற்றியாள்கொல்? வெறுப்பினால், |
| வேண்டு உருவம் கொண்டதோர் கூற்றம்கொல்? ஆண்டார், |
10 | கடிது, இவளைக் காவார் விடுதல்: கொடி இயல், |
| பல் கலை, சில் பூங் கலிங்கத்தள் ஈங்கு, இது ஓர் |
| நல்கூர்ந்தார் செல்வ மகள்! |
| இவளைச் சொல்லாடிக் காண்பேன், தகைத்து |
| நல்லாய்! கேள்: |
15 | ஆய் தூவி அனம் என, அணி மயில் பெடை என, |
| தூது உண் அம் புறவு என, துதைந்த நின் எழில் நலம் |
| மாதர் கொள் மான் நோக்கின் மட நல்லாய்! நிற் கண்டார்ப் |
| பேதுறூஉம் என்பதை அறிதியோ? அறியாயோ? |
| நுணங்கு அமைத் திரள் என, நுண் இழை அணை என, |
20 | முழங்கு நீர்ப் புணை என, அமைந்த நின் தட மென் தோள் |
| வணங்கு இறை, வால் எயிற்று, அம் நல்லாய்! நிற் கண்டார்க்கு |
| அணங்காகும் என்பதை அறிதியோ? அறியாயோ? |
| முதிர் கோங்கின் முகை என, முகம் செய்த குரும்பை என, |
| பெயல் துளி முகிழ் என, பெருத்த நின் இள முலை |
25 | மயிர் வார்ந்த வரி முன்கை மட நல்லாய்! நிற் கண்டார் |
| உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ? உணராயோ? |
| என ஆங்கு, |
| பேதுற்றாய் போலப் பிறர் எவ்வம் நீ அறியாய், |
| யாது ஒன்றும் வாய்வாளாது இறந்தீவாய்! கேள், இனி: |
30 | நீயும் தவறு இலை; நின்னைப் புறங்கடைப் |
| போதர விட்ட நுமரும், தவறு இலர்; |
| நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டாங்கு, |
| ‘பறை அறைந்தல்லது செல்லற்க!’ என்னா |
| இறையே தவறு உடையான் |