| வார் உறு வணர் ஐம்பால், வணங்கு இறை நெடு மென் தோள், |
| பேர் எழில் மலர் உண்கண், பிணை எழில் மான் நோக்கின், |
| கார் எதிர் தளிர் மேனி, கவின் பெறு சுடர் நுதல், |
| கூர் எயிற்று முகை வெண் பல், கொடி புரையும் நுசுப்பினாய்! |
5 | நேர் சிலம்பு அரி ஆர்ப்ப, நிரை தொடிக் கை வீசினை, |
| ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய்! கேள்: |
| உளனா, என் உயிரை உண்டு, உயவு நோய் கைம்மிக, |
| இளமையான் உணராதாய்! நின் தவறு இல்லானும், |
| களைநர் இல் நோய் செய்யும் கவின் அறிந்து, அணிந்து, தம் |
10 | வளமையான் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய் |
| நடை மெலிந்து, அயர்வு உறீஇ, நாளும் என் நலியும் நோய் |
| மடமையான் உணராதாய்! நின் தவறு இல்லானும், |
| இடை நில்லாது எய்க்கும் நின் உரு அறிந்து, அணிந்து, தம் |
| உடைமையால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய் |
15 | அல்லல் கூர்ந்து அழிவுற, அணங்காகி அடரும் நோய் |
| சொல்லினும் அறியாதாய்! நின் தவறு இல்லானும், |
| ஒல்லையே உயிர் வௌவும் உரு அறிந்து, அணிந்து, தம் |
| செல்வத்தால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய் |
| என ஆங்கு |
20 | ஒறுப்பின், யான் ஒறுப்பது நுமரை; யான்; மற்று இந் நோய் |
| பொறுக்கலாம் வரைத்து அன்றிப் பெரிதாயின், பொலங்குழாய்! |
| மறுத்து இவ் ஊர் மன்றத்து மடல் ஏறி, |
| நிறுக்குவென் போல்வல் யான், நீ படு பழியே |