|
6 | தலைவி கூற்று
| | | மரையா மரல் கவர, மாரி வறப்ப | | வரை ஓங்கு அருஞ் சுரத்து ஆர் இடைச் செல்வோர், | | சுரை அம்பு, மூழ்கச் சுருங்கி, புரையோர் தம், | | உள் நீர் வறப்பப் புலர் வாடு நாவிற்கு | 5 | தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந் துயரம் | | கண்ணீர் நனைக்கும் கடுமைய, காடு என்றால், | | என், நீர் அறியாதீர் போல இவை கூறல்? | | நின் நீர அல்ல, நெடுந் தகாய்! எம்மையும், | | அன்பு அறச் சூழாதே, ஆற்றிடை நும்மொடு | 10 | துன்பம் துணையாக நாடின், அது அல்லது | | இன்பமும் உண்டோ, எமக்கு? | | | தலைவன் செலவுக் குறிப்பு அறிந்து, ‘நீர் செல்லும் கடுஞ் சுரத்துத் துன்பத்திற்குத் துணையாக எம்மையும் உடன்கொண்டு சென்மின்’ எனத் தலைவி கூறியது |
|
|
|