64
தலைவன் கூற்று


தலைவன்

அணி முகம் மதி ஏய்ப்ப, அம் மதியை நனி ஏய்க்கும்,
மணி முகம், மா மழை, நின் பின், ஒப்ப, பின்னின்கண்
விரி நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி
அரவுக்கண் அணி உறழ் ஆரல் மீன் தகை ஒப்ப,
5அரும் படர் கண்டாரைச் செய்து, ஆங்கு இயலும்
விரிந்து ஒலி கூந்தலாய்! கண்டை; எமக்குப்
பெரும் பொன் படுகுவை பண்டு

தலைவி

ஏஎ, எல்லா! மொழிவது கண்டை, இஃது ஒத்தன்; தொய்யில்
எழுதி இறுத்த பெரும் பொன் படுகம்;
10உழுவது உடையமோ, யாம்?

தலைவன்

உழுதாய்
சுரும்பு இமிர் பூங் கோதை அம் நல்லாய்! யான் நின்
திருந்து இழை மென் தோள் இழைத்த, மற்று இஃதோ,
கரும்பு எல்லாம் நின் உழவு அன்றோ? ஒருங்கே
15துகள் அறு வாள் முகம் ஒப்ப மலர்ந்த
குவளையும், நின் உழவு அன்றோ? இகலி
முகை மாறு கொள்ளும் எயிற்றாய்! இவை அல்ல,
என் உழுவாய் நீ, மற்று இனி

தலைவி

எல்லா! நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு;
20முற்று எழில் நீல மலர் என உற்ற,
இரும்பு ஈர் வடி அன்ன, உண்கட்கும், எல்லாம்,
பெரும் பொன் உண்டு என்பாய்! இனி

தலைவன்

நல்லாய்! இகுளை! கேள்:
ஈங்கே தலைப்படுவன், உண்டான் தலைப்பெயின்,
25வேந்து கொண்டன்ன பல

தலைவி ஆக!’ என உடம்பட்டுக் கூற, தலைவன் உரைத்தல்

‘ஆங்கு ஆக!’ ‘அத் திறம் அல்லாக்கால், வேங்கை வீ
முற்று எழில் கொண்ட சுணங்கு அணி பூண் ஆகம்
பொய்த்து ஒருகால் எம்மை முயங்கினை சென்றீமோ,
முத்து ஏர் முறுவலாய்! நீ படும் பொன் எல்லாம்
30 உத்தி எறிந்துவிடற்கு’

அருமை செய்து அயர்த்த தலைவன் வந்துழி, தலைவி எள்ளின இடத்து, தலைவன் அவளோடு உறழ்ந்து கூறி, நகையாடி, கூட்டத்திற்கு உடம்படுவித்தது. இதற்கு விதி ‘உயர் மொழிக்கு உரிய உறழும் கிளவி’ என்பதனுள், ‘தலைவன் உயர் மொழிக்குத் தலைவி உறழ்ந்து கூறும்’ என்றாம் (28)