| தலைவன்
|
| அணி முகம் மதி ஏய்ப்ப, அம் மதியை நனி ஏய்க்கும், |
| மணி முகம், மா மழை, நின் பின், ஒப்ப, பின்னின்கண் |
| விரி நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி |
| அரவுக்கண் அணி உறழ் ஆரல் மீன் தகை ஒப்ப, |
5 | அரும் படர் கண்டாரைச் செய்து, ஆங்கு இயலும் |
| விரிந்து ஒலி கூந்தலாய்! கண்டை; எமக்குப் |
| பெரும் பொன் படுகுவை பண்டு |
| தலைவி
|
| ஏஎ, எல்லா! மொழிவது கண்டை, இஃது ஒத்தன்; தொய்யில் |
| எழுதி இறுத்த பெரும் பொன் படுகம்; |
10 | உழுவது உடையமோ, யாம்? |
| தலைவன்
|
| உழுதாய் |
| சுரும்பு இமிர் பூங் கோதை அம் நல்லாய்! யான் நின் |
| திருந்து இழை மென் தோள் இழைத்த, மற்று இஃதோ, |
| கரும்பு எல்லாம் நின் உழவு அன்றோ? ஒருங்கே |
15 | துகள் அறு வாள் முகம் ஒப்ப மலர்ந்த |
| குவளையும், நின் உழவு அன்றோ? இகலி |
| முகை மாறு கொள்ளும் எயிற்றாய்! இவை அல்ல, |
| என் உழுவாய் நீ, மற்று இனி |
| தலைவி
|
| எல்லா! நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு; |
20 | முற்று எழில் நீல மலர் என உற்ற, |
| இரும்பு ஈர் வடி அன்ன, உண்கட்கும், எல்லாம், |
| பெரும் பொன் உண்டு என்பாய்! இனி |
| தலைவன்
|
| நல்லாய்! இகுளை! கேள்: |
| ஈங்கே தலைப்படுவன், உண்டான் தலைப்பெயின், |
25 | வேந்து கொண்டன்ன பல |
| தலைவி ஆக!’ என உடம்பட்டுக் கூற, தலைவன் உரைத்தல்
|
| ‘ஆங்கு ஆக!’ ‘அத் திறம் அல்லாக்கால், வேங்கை வீ |
| முற்று எழில் கொண்ட சுணங்கு அணி பூண் ஆகம் |
| பொய்த்து ஒருகால் எம்மை முயங்கினை சென்றீமோ, |
| முத்து ஏர் முறுவலாய்! நீ படும் பொன் எல்லாம் |
30 | உத்தி எறிந்துவிடற்கு’ |