| கார் முற்றி, இணர் ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து, |
| சீர் முற்றி, புலவர் வாய்ச் சிறப்பு எய்தி, இரு நிலம் |
| தார் முற்றியது போல, தகை பூத்த வையை தன் |
| நீர் முற்றி, மதில் பொரூஉம் பகை அல்லால், நேராதார் |
5 | போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன் |
| நலத்தகை, எழில் உண்கண் நல்லார் தம் கோதையால் |
| அலைத்த, புண், வடு, காட்டி, அன்பு இன்றி வரின் எல்லா! |
| புலப்பென் யான் என்பேன்மன்? அந் நிலையே, அவற் காணின், |
| கலப்பென் என்னும், இக் கையறு நெஞ்சே |
10 | கோடு எழில் அகல் அல்குற் கொடி அன்னார் முலை மூழ்கி, |
| பாடு அழி சாந்தினன், பண்பு இன்றி வரின் எல்லா! |
| ஊடுவென் என்பேன்மன்? அந் நிலையே, அவற் காணின், |
| கூடுவென் என்னும், இக் கொள்கை இல் நெஞ்சே |
| இனிப் புணர்ந்த எழில் நல்லார் இலங்கு எயிறு உறாஅலின், |
15 | நனிச் சிவந்த வடுக் காட்டி, நாண் இன்றி வரின் எல்லா! |
| துனிப்பென் யான் என்பேன்மன்? அந் நிலையே, அவற் காணின், |
| தனித்தே தாழும், இத் தனி இல் நெஞ்சே |
| என ஆங்கு, |
| பிறை புரை ஏர் நுதால்! தாம் எண்ணியவை எல்லாம் |
20 | துறைபோதல் ஒல்லுமோ தூ ஆகாது ஆங்கே |
| அறை போகும் நெஞ்சு உடையார்க்கு? |