| போது அவிழ் பனிப் பொய்கை, புதுவது தளைவிட்ட |
| தாது சூழ் தாமரைத் தனி மலர்ப் புறம் சேர்பு |
| காதல் கொள் வதுவை நாள், கலிங்கத்துள் ஒடுங்கிய |
| மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணையாக, |
5 | ஓதுடை அந்தணன் எரி வலம் செய்வான் போல், |
| ஆய் தூவி அன்னம் தன் அணி நடைப் பெடையொடு |
| மேதகத் திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர! |
| தெள் அரிச் சிலம்பு ஆர்ப்ப, தெருவின்கண் தாக்கி, நின் |
| உள்ளம் கொண்டு, ஒழித்தாளைக் குறை கூறிக் கொள நின்றாய் |
10 | துணிந்தது பிறிதாக, 'துணிவிலள் இவள்' என, |
| பணிந்தாய் போல் வந்து, ஈண்டுப் பயனில மொழிவாயோ? |
| பட்டுழி அறியாது, பாகனைத் தேரொடும் |
| விட்டு, அவள் வரல் நோக்கி, விருந்து ஏற்றுக்கொள நின்றாய் |
| நெஞ்சத்த பிறவாக, 'நிறையிலள் இவள்' என, |
15 | வஞ்சத்தான் வந்து, ஈங்கு வலி அலைத்தீவாயோ? |
| இணர் ததை தண் காவின், இயன்ற நின் குறி வந்தாள் |
| புணர்வினில் புகன்று, ஆங்கே புனலாடப் பண்ணியாய் |
| தருக்கிய பிறவாக, 'தன் இலள் இவள்' என, |
| செருக்கினால் வந்து, ஈங்குச் சொல் உகுத்தீவாயோ? |
20 | என ஆங்கு |
| தருக்கேம், பெரும! நின் நல்கல்; விருப்புற்றுத் |
| தாழ்ந்தாய் போல் வந்து, தகவில செய்யாது, |
| சூழ்ந்தவை செய்து, மற்று எம்மையும் உள்ளுவாய் |
| வீழ்ந்தார் விருப்பு அற்றக்கால் |