| ‘வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறு |
| வான் நீங்கு வைப்பின் வழங்காத் தேர் நீர்க்கு அவாஅம் |
| கானம் கடத்திர், எனக் கேட்பின், யான் ஒன்று |
| உசாவுகோ ஐய! சிறிது? |
5 | நீயே, செய் வினை மருங்கில் செலவு, அயர்ந்து, யாழ நின் |
| கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே; |
| இவட்கே, செய்வு உறு மண்டிலம் மையாப்பது போல், |
| மை இல் வாள் முகம் பசப்பு ஊரும்மே |
| நீயே, வினை மாண் காழகம் வீங்கக் கட்டி, |
10 | புனை மாண் மரீஇய அம்பு தெரிதியே; |
| இவட்கே, சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல், |
| இனை நோக்கு உண்கண் நீர் நில்லாவே |
| நீயே, புலம்பு இல் உள்ளமொடு பொருள்வயிற் செலீஇய, |
| வலம் படு திகிரி வாய் நீவுதியே; |
15 | இவட்கே, அலங்கு இதழ்க் கோடல் வீ உகுபவை போல், |
| இலங்கு ஏர் எல் வளை இறை ஊரும்மே |
| என நின், |
| செல் நவை அரவத்தும் இனையவள் நீ நீப்பின், |
| தன் நலம் கடைகொளப்படுதலின், மற்று இவள் |
20 | இன் உயிர் தருதலும் ஆற்றுமோ |
| முன்னிய தேஎத்து முயன்று செய் பொருளே? |