| விரி கதிர் மண்டிலம் வியல் விசும்பு ஊர்தர, |
| புரி தலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி, |
| வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள் |
| துனி சிறந்து இழிதரும் கண்ணின் நீர் அறல் வார, |
5 | இனிது அமர் காதலன் இறைஞ்சித் தன் அடி சேர்பு, |
| நனி விரைந்து அளித்தலின், நகுபவள் முகம் போல |
| பனி ஒரு திறம் வார, பாசடைத் தாமரைத் |
| தனி மலர் தளை விடூஉம் தண் துறை நல் ஊர! |
| 'ஒரு நீ பிறர் இல்லை, அவன் பெண்டிர்' என உரைத்து, |
10 | தேரொடும் தேற்றிய பாகன் வந்தீயான்கொல் |
| ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்த புண் |
| பாரித்துப் புணர்ந்த நின் பரத்தைமை காணிய? |
| 'மடுத்து அவன் புகுவழி மறையேன்' என்று யாழொடும் |
| எடுத்துச் சூள் பல உற்ற பாணன் வந்தீயான்கொல் |
15 | அடுத்துத் தன் பொய் உண்டார்ப் புணர்ந்த நின் எருத்தின்கண் |
| எடுத்துக்கொள்வது போலும் தொடி வடுக் காணிய? |
| 'தணந்தனை' எனக் கேட்டு, தவறு ஓராது, எமக்கு நின் |
| குணங்களைப் பாராட்டும் தோழன் வந்தீயான்கொல் |
| கணங்குழை நல்லவர் கதுப்பு அறல் அணைத் துஞ்சி, |
20 | அணங்கு போல் கமழும் நின் அலர் மார்பு காணிய? |
| என்று, நின் |
| தீரா முயக்கம் பெறுநர்ப் புலப்பவர் |
| யார்? நீ வரு நாள் போல் அமைகுவம் யாம்; புக்கீமோ! |
| மாரிக்கு அவாவுற்றுப் பீள் வாடும் நெல்லிற்கு, ஆங்கு, |
25 | ஆராத் துவலை அளித்தது போலும், நீ |
| ஓர் யாட்டு ஒரு கால் வரவு |