| அகன் துறை அணி பெற, புதலொடு தாழ்ந்த |
| பகன்றைப் பூ உற நீண்ட பாசடைத் தாமரை, |
| கண் பொர ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தான், |
| தண் கமழ் நறுந் தேறல் உண்பவள் முகம் போல, |
5 | வண் பிணி தளை விடூஉம் வயல் அணி நல் ஊர! |
| 'நோதக்காய்' என நின்னை நொந்தீவார் இல்வழி, |
| 'தீது இலேன் யான்' எனத் தேற்றிய வருதிமன் |
| ஞெகிழ் தொடி இளையவர் இடை முலைத் தாது சோர்ந்து, |
| இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையாக்கால்? |
10 | கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல்வழி, |
| 'மனத்தில் தீது இலன்' என மயக்கிய வருதிமன் |
| அலமரல் உண்கண்ணார் ஆய் கோதை குழைத்த நின் |
| மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையாக்கால்? |
| என்னை நீ செய்யினும், உரைத்தீவார் இல்வழி, |
15 | முன் அடிப் பணிந்து, எம்மை உணர்த்திய வருதிமன் |
| நிரை தொடி நல்லவர் துணங்கையுள் தலைக் கொள்ள, |
| கரையிடைக் கிழிந்த நின் காழகம் வந்து உரையாக்கால்? |
| என ஆங்கு |
| மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின் |
20 | தண்டாப் பரத்தை தலைக்கொள்ள, நாளும் |
| புலத் தகைப் பெண்டிரைத் தேற்றி; மற்று யாம்எனின், |
| தோலாமோ, நின் பொய் மருண்டு? |