| பொய்கைப் பூப் புதிது உண்ட வரி வண்டு கழிப் பூத்த |
| நெய்தல் தாது அமர்ந்து ஆடி, பாசடைச் சேப்பினுள் |
| செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை, |
| மை தபு, கிளர் கொட்டை மாண் பதிப் படர்தரூஉம், |
5 | கொய் குழை அகை காஞ்சித் துறை அணி நல் ஊர! |
| 'அன்பு இலன், அறன் இலன், எனப்படான்' என ஏத்தி, |
| நின் புகழ் பல பாடும் பாணனும் ஏமுற்றான் |
| நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டாங்கு, அளி இன்மை |
| கண்டும், நின் மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார் |
10 | முன்பகல் தலைக்கூடி, நன்பகல் அவள் நீத்து, |
| பின்பகல் பிறர்த் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய் |
| என ஆங்கு |
| 'கிண்கிணி மணித் தாரோடு ஒலித்து ஆர்ப்ப, ஒண் தொடிப் |
| பேர் அமர்க் கண்ணார்க்கும் படு வலை இது' என, |
15 | ஊரவர் உடன் நகத் திரிதரும் |
| தேர் ஏமுற்றன்று, நின்னினும் பெரிதே |