| புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடைப் பூத்த |
| முள் அரைத் தாமரை முழு முதல் சாய்த்து, அதன் |
| வள் இதழ் உற நீடி, வயங்கிய ஒரு கதிர், |
| அவை புகழ் அரங்கின்மேல் ஆடுவாள் அணி நுதல் |
5 | வகை பெறச் செரீஇய வயந்தகம் போல், தோன்றும் |
| தகை பெறு கழனி அம் தண் துறை ஊர! கேள்: |
| அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனைக் கொள்ளாதி; |
| மணி புரை செவ் வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால்; |
| 'தோய்ந்தாரை அறிகுவேன், யான்' என, கமழும் நின் |
10 | சாந்தினால் குறி கொண்டாள் சாய்குவள் அல்லளோ? |
| புல்லல் எம் புதல்வனை; புகல் அகல் நின் மார்பில் |
| பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானால்; |
| மாண் இழை மட நல்லார் முயக்கத்தை நின் மார்பில் |
| பூணினால் குறி கொண்டாள் புலக்குவள் அல்லளோ? |
15 | கண்டே எம் புதல்வனைக் கொள்ளாதி; நின் சென்னி |
| வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால்; |
| 'நண்ணியார்க் காட்டுவது இது' என, கமழும் நின் |
| கண்ணியால் குறி கொண்டாள் காய்குவள் அல்லளோ? |
| என ஆங்கு |
20 | பூங் கண் புதல்வனைப் பொய் பல பாராட்டி, |
| நீங்காய் இகவாய் நெடுங் கடை நில்லாதி; |
| ஆங்கே அவர் வயின் சென்றீ அணி சிதைப்பான் |
| ஈங்கு எம் புதல்வனைத் தந்து |