| நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்க, |
| கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல, ஞாயிறு |
| கடுகுபு கதிர் மூட்டிக் காய் சினம் தெறுதலின், |
| உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம், |
5 | வறன் உழு நாஞ்சில் போல், மருப்பு ஊன்றி நிலம் சேர, |
| விறல் மலை வெம்பிய போக்கு அரு வெஞ் சுரம் |
| சொல்லாது இறப்பத் துணிந்தனிர்க்கு ஒரு பொருள் |
| சொல்லுவது உடையேன்; கேண்மின், மற்று ஐஇய! |
| வீழுநர்க்கு இறைச்சியாய் விரல் கவர்பு இசைக்கும் கோல் |
10 | ஏழும் தம் பயன் கெட, இடை நின்ற நரம்பு அறூஉம் |
| யாழினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ? |
| மரீஇத் தாம் கொண்டாரைக் கொண்டக்கால் போலாது, |
| பிரியுங்கால் பிறர் எள்ள, பீடு இன்றிப் புறம் மாறும் |
| திருவினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ? |
15 | புரை தவப் பயன் நோக்கார் தம் ஆக்கம் முயல்வாரை |
| வரைவு இன்றிச் செறும் பொழுதில், கண் ஓடாது உயிர் வௌவும் |
| அரைசினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ? |
| என ஆங்கு |
| நச்சல் கூடாது பெரும! இச் செலவு |
20 | ஒழிதல் வேண்டுவல், சூழின், பழி இன்று; |
| மன்னவன் புறந்தர வரு விருந்து ஓம்பி, |
| தன் நகர் விழையக் கூடின், |
| இன் உறல் வியன் மார்ப! அது மனும் பொருளே |