| தலைவி தன் புதல்வனுடன் சென்ற தோழி நீட்டித்து வந்தமை பற்றி வினாவுதல்
|
| பெருந் திரு நிலைஇய வீங்கு சோற்று அகல் மனை, |
| பொருந்து நோன் கதவு ஒற்றிப் புலம்பி யாம் உலமர, |
| இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின் |
| விளையாட்டிக்கொண்டு வரற்கு எனச் சென்றாய், |
5 | உளைவு இலை; ஊட்டலென் தீம் பால் பெருகும் அளவெல்லாம் |
| நீட்டித்த காரணம் என்? |
| தோழியின் மறுமொழி
|
| கேட்டீ |
| பெரு மடற் பெண்ணைப் பிணர்த் தோட்டுப் பைங் குரும்பைக் |
| குட வாய்க் கொடிப் பின்னல் வாங்கி, தளரும் |
10 | பெரு மணித் திண் தேர்க் குறுமக்கள் நாப்பண், |
| அகல் நகர் மீள்தருவானாக, புரி ஞெகிழ்பு |
| நீல நிரைப் போது உறு காற்கு உலைவன போல், |
| சாலகத்து ஒல்கிய கண்ணர், 'உயர் சீர்த்தி |
| ஆல் அமர் செல்வன் அணி சால் மகன் விழாக் |
15 | கால்கோள்' என்று ஊக்கி, கதுமென நோக்கி, |
| திருந்துஅடி நூபுரம் ஆர்ப்ப இயலி, விருப்பினால், |
| 'கண்ணும், நுதலும், கவுளும், கவவியார்க்கு |
| ஒண்மை எதிரிய அம் கையும், தண் எனச் |
| செய்வன சிறப்பின் சிறப்புச் செய்து, இவ் இரா |
20 | எம்மொடு சேர்ந்து சென்றீவாயால்; செம்மால்! |
| நலம் புதிது உண்டு உள்ளா நாணிலி செய்த |
| புலம்பு எலாம் தீர்க்குவேம் மன்' என்று இரங்குபு, |
| வேற்று ஆனாத் தாயர் எதிர்கொள்ள, மாற்றாத |
| கள்வனால் தங்கியது அல்லால், கதியாதி, |
25 | ஒள்ளிழாய்! யான் தீது இலேன் |
| தலைவி தன் புதல்வனைக் கடிந்தும், அப்பொழுது அங்குவந்த தலைவனொடு புலந்தும் கூறுதல்
|
| எள்ளலான், அம் மென் பணைத் தோள் நுமர் வேய்ந்த கண்ணியோடு |
| எம் இல் வருதியோ? எல்லா! நீ தன் மெய்க்கண் |
| அம் தீம் சொல் நல்லார் அணிந்த கலம் காட்டி, |
| முந்தை இருந்து மகன் செய்த நோய்த்தலை |
30 | வெந்த புண் வேல் எறிந்தற்றால், வடுவொடு |
| தந்தையும் வந்து நிலை |