85
தலைவி கூற்று

காலவை, சுடு பொன் வளைஇய ஈர் அமை சுற்றொடு

பொடி அழற் புறம் தந்த செய்வுறு கிண்கிணி

உடுத்தவை, கைவினைப் பொலிந்த காசு அமை பொல்ங் காழ்; மேல்

மை இல் செந் துகிர்க் கோவை; அவற்றின் மேல்

5

தைஇய, பூந் துகில், ஐது கழல் ஒரு திரை

கையதை, அலவன் கண் பெற அடங்கச் சுற்றிய

பல உறு கண்ணுள் சில கோல் அவிர் தொடி

பூண்டவை, எறியா வாளும் எற்றா மழுவும்

செறியக் கட்டி, ஈர்இடைத் தாழ்ந்த,

10

பெய் புல மூதாய்ப் புகர் நிறத் துகிரின்

மை அற விளங்கிய ஆன் ஏற்று அவிர் பூண்

சூடின, இருங் கடல் முத்தமும், பல் மணி, பிறவும், ஆங்கு

ஒருங்கு உடன் கோத்த உருள் அமை முக் காழ்; மேல்

சுரும்பு ஆர் கண்ணிக்குச் சூழ் நூலாக,

15

அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாண,

சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை

ஆங்க அவ்வும் பிறவும் அணிக்கு அணியாக, நின்

செல்வு உறு திண் தேர்க் கொடுஞ் சினைக் கைப்பற்றிப்

பைபயத் தூங்கும் நின் மெல் விரற் சீறடி

20

நோதலும் உண்டு; ஈங்கு என் கை வந்தீ,

செம்மால்! நின் பால் உண்ணிய

பொய் போர்த்துப் பாண் தலை இட்ட பல வல் புலையனைத்

தூண்டிலா விட்டுத் துடக்கி, தான் வேண்டியார்

நெஞ்சம் பிணித்தல் தொழிலாத் திரிதரும்

25

நுந்தைபால் உண்டி, சில

நுந்தை வாய் மாயச் சூள் தேறி, மயங்கு நோய் கைமிக,

பூ எழில் உண்கண் பனி பரப்ப, கண் படா

ஞாயர்பால் உண்டி, சில

அன்னையோ! யாம் எம் மகனைப் பாராட்ட, கதுமெனத்

30

தாம் வந்தார், தம் பாலவரோடு; தம்மை

வருக என்றார், யார்கொலோ, ஈங்கு?

என் பால் அல் பாராட்டு உவந்தோய்! குடி; உண்டீத்தை; என்

பாராட்டைப்பாலோ சில

செருக் குறித்தாரை உவகைக் கூத்தாட்டும்

35

வரிசைப் பெரும் பாட்டொடு எல்லாம் பருகீத்தை

தண்டுவென் ஞாயர் மாட்டைப் பால்


தலைவி தன் மகனைப் பாராட்டி, பால் கூறிட்டு ஊட்டுகின்றவழி, சிறைப்புறமாகக் கேட்டுப் புக்க தலைவனைக் கண்டு, தன்னுள்ளே புலந்து, புலவியொடு பின்னும் பாராட்டியது.