| காலவை, சுடு பொன் வளைஇய ஈர் அமை சுற்றொடு |
| பொடி அழற் புறம் தந்த செய்வுறு கிண்கிணி |
| உடுத்தவை, கைவினைப் பொலிந்த காசு அமை பொல்ங் காழ்; மேல் |
| மை இல் செந் துகிர்க் கோவை; அவற்றின் மேல் |
5 | தைஇய, பூந் துகில், ஐது கழல் ஒரு திரை |
| கையதை, அலவன் கண் பெற அடங்கச் சுற்றிய |
| பல உறு கண்ணுள் சில கோல் அவிர் தொடி |
| பூண்டவை, எறியா வாளும் எற்றா மழுவும் |
| செறியக் கட்டி, ஈர்இடைத் தாழ்ந்த, |
10 | பெய் புல மூதாய்ப் புகர் நிறத் துகிரின் |
| மை அற விளங்கிய ஆன் ஏற்று அவிர் பூண் |
| சூடின, இருங் கடல் முத்தமும், பல் மணி, பிறவும், ஆங்கு |
| ஒருங்கு உடன் கோத்த உருள் அமை முக் காழ்; மேல் |
| சுரும்பு ஆர் கண்ணிக்குச் சூழ் நூலாக, |
15 | அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாண, |
| சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை |
| ஆங்க அவ்வும் பிறவும் அணிக்கு அணியாக, நின் |
| செல்வு உறு திண் தேர்க் கொடுஞ் சினைக் கைப்பற்றிப் |
| பைபயத் தூங்கும் நின் மெல் விரற் சீறடி |
20 | நோதலும் உண்டு; ஈங்கு என் கை வந்தீ, |
| செம்மால்! நின் பால் உண்ணிய |
| பொய் போர்த்துப் பாண் தலை இட்ட பல வல் புலையனைத் |
| தூண்டிலா விட்டுத் துடக்கி, தான் வேண்டியார் |
| நெஞ்சம் பிணித்தல் தொழிலாத் திரிதரும் |
25 | நுந்தைபால் உண்டி, சில |
| நுந்தை வாய் மாயச் சூள் தேறி, மயங்கு நோய் கைமிக, |
| பூ எழில் உண்கண் பனி பரப்ப, கண் படா |
| ஞாயர்பால் உண்டி, சில |
| அன்னையோ! யாம் எம் மகனைப் பாராட்ட, கதுமெனத் |
30 | தாம் வந்தார், தம் பாலவரோடு; தம்மை |
| வருக என்றார், யார்கொலோ, ஈங்கு? |
| என் பால் அல் பாராட்டு உவந்தோய்! குடி; உண்டீத்தை; என் |
| பாராட்டைப்பாலோ சில |
| செருக் குறித்தாரை உவகைக் கூத்தாட்டும் |
35 | வரிசைப் பெரும் பாட்டொடு எல்லாம் பருகீத்தை |
| தண்டுவென் ஞாயர் மாட்டைப் பால் |