| மை படு சென்னி மழ களிற்று ஓடை போல், |
| கை புனை முக்காழ் கயந் தலைத் தாழ, |
| பொலம் செய் மழுவொடு வாள் அணி கொண்ட |
| நலம் கிளர் ஒண் பூண் நனைத்தரும் அவ் வாய் |
5 | கலந்து கண் நோக்கு ஆர, காண்பு இன் துகிர்மேல் |
| பொலம் புனை செம்பாகம் போர் கொண்டு இமைப்ப, |
| கடி அரணம் பாயா நின் கை புனை வேழம், |
| தொடியோர் மணலின் உழக்கி, அடி ஆர்ந்த |
| தேரை வாய்க் கிண்கிணி ஆர்ப்ப, இயலும் என் |
10 | போர் யானை, வந்தீக, ஈங்கு! |
| செம்மால்! வனப்பு எலாம் நுந்தையை ஒப்பினும், நுந்தை |
| நிலைப் பாலுள் ஒத்த குறி என் வாய்க் கேட்டு ஒத்தி; |
| கன்றிய தெவ்வர்க் கடந்து களம் கொள்ளும் |
| வென்றிமாட்டு ஒத்தி, பெரும! மற்று ஒவ்வாதி, |
15 | 'ஒன்றினேம் யாம்' என்று உணர்ந்தாரை, நுந்தை போல், |
| மென் தோள் நெகிழ விடல் |
| பால் கொளல் இன்றி, பகல் போல், முறைக்கு ஒல்காக் |
| கோல் செம்மை ஒத்தி, பெரும! மற்று ஒவ்வாதி, |
| கால் பொரு பூவின் கவின் வாட, நுந்தைபோல், |
20 | சால்பு ஆய்ந்தார் சாய விடல் |
| வீதல் அறியா விழுப் பொருள் நச்சியார்க்கு |
| ஈதல்மாட்டு ஒத்தி, பெரும! மற்று ஒவ்வாதி, |
| மாதர் மென் நோக்கின் மகளிரை, நுந்தைபோல், |
| நோய் கூர நோக்காய் விடல் |
| பின்னே மறைய நின்ற தலைவனைத் தலைவி கண்டமை |
25 | ஆங்க |
| திறன் அல்ல யாம் கழற, யாரை நகும், இம் |
| மகன் அல்லான் பெற்ற மகன்? |
| மறை நின்று, தாம் மன்ற வந்தீத்தனர் |
| தலைவன் உரையும், அப்பொழுது தலைவன் மார்பில் பாய்ந்த புதல்வன் செயல் கண்டு, தலைவி உரைத்தலும் |
| 'ஆயிழாய்! தாவாத எற்குத் தவறு உண்டோ? காவாது ஈங்கு |
30 | ஈத்தை, இவனை யாம் கோடற்கு' சீத்தை; யாம் |
| கன்றி அதனைக் கடியவும், கை நீவி, |
| குன்ற இறு வரைக் கோண்மா இவர்ந்தாங்கு, |
| தந்தை வியல் மார்பில் பாய்ந்தான் அறன் இல்லா |
| அன்பிலி பெற்ற மகன் |