| தலைவி |
| ஒரூஉ; கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற |
| முடி உதிர் பூந் தாது மொய்ம்பின ஆக, |
| தொடிய, எமக்கு நீ யாரை? பெரியார்க்கு |
| அடியரோ ஆற்றாதவர்? |
| தலைவன் |
5 | கடியர் தமக்கு யார் சொல்லத் தக்கார் மாற்று? |
| தலைவி |
| வினைக்கெட்டு, வாய் அல்லா வெண்மை உரையாது. கூறு நின் |
| மாயம், மருள்வாரகத்து |
| தலைவன் |
| ஆயிழாய்! நின் கண் பெறின் அல்லால், இன் உயிர் வாழ்கல்லா |
| என்கண் எவனோ, தவறு? |
| தலைவி |
10 | இஃது ஒத்தன்! புள்ளிக் களவன் புனல் சேர் பொதுக்கம் போல், |
| வள் உகிர் போழ்ந்தனவும், வாள் எயிறு உற்றனவும், |
| ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணியும், நல்லார் |
| சிரறுபு சீறச் சிவந்த நின் மார்பும், |
| தவறாதல் சாலாவோ? கூறு |
| தலைவன் |
15 | 'அது தக்கது; வேற்றுமை என்கண்ணோ ஓராதி; தீது இன்மை |
| தேற்றக் கண்டீயாய்; தெளிக்கு |
| தலைவி |
| இனித் தேற்றேம் யாம் |
| தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார் |
| தார் மயங்கி வந்த தவறு அஞ்சி, போர் மயங்கி, |
20 | நீ உறும் பொய்ச் சூள் அணங்கு ஆகின், மற்று இனி |
| யார் மேல்? விளியுமோ? கூறு |