| தலைவி |
| கண்டேன், நின் மாயம் களவு ஆதல்; பொய்ந் நகா, |
| மண்டாத சொல்லித் தொடாஅல்; தொடீஇய நின் |
| பெண்டிர் உளர்மன்னோ, ஈங்கு? |
| தலைவன் |
| ஒண்தொடி! நீ கண்டது எவனோ தவறு? |
| தலைவி |
5 | கண்டது நோயும் வடுவும் கரந்து, மகிழ் செருக்கி, |
| பாடு பெயல் நின்ற பானாள் இரவில் |
| தொடி பொலி தோளும், முலையும், கதுப்பும், |
| வடிவு ஆர் குழையும், இழையும், பொறையா |
| ஒடிவது போலும் நுசுப்போடு, அடி தளரா, |
10 | ஆராக் கவவின் ஒருத்தி வந்து அல்கல் தன் |
| சீர் ஆர் ஞெகிழம் சிலம்ப, சிவந்து, நின் |
| போர் ஆர் கதவம் மிதித்தது அமையுமோ? |
| ஆயிழை ஆர்க்கும் ஒலி கேளா, அவ் எதிர் |
| தாழாது எழுந்து நீ சென்றது அமையுமோ? |
15 | மாறாள் சினைஇ, அவள் ஆங்கே, நின் மார்பில் |
| நாறு இணர்ப் பைந் தார் பரிந்தது அமையுமோ? |
| 'தேறு நீ; தீயேன் அலேன்' என்று மற்று அவள் |
| சீறடி தோயா இறுத்தது அமையுமோ? |
| கூறு இனி; காயேமோ, யாம்? |
| தலைவன் |
20 | தேறின், பிறவும் தவறு இலேன் யான்; |
| அல்கல் கனவுகொல் நீ கண்டது? |
| தலைவி |
| 'கனை பெயல் தண் துளி வீசும் பொழுதில் குறி வந்தாள் |
| கண்ட கனவு' என, 'காணாது, மாறு உற்று |
| பண்டைய அல்ல, நின் பொய்ச் சூள், நினக்கு; எல்லா! |
25 | நின்றாய்; நின் புக்கில் பல' |
| தலைவன் |
| மென் தோளாய்! நல்கு, நின் நல் எழில்; உண்கு |
| தலைவி
|
| ஏடா! குறை உற்று நீ எம் உரையல்! நின் தீமை |
| பொறை ஆற்றேம் என்றல் பெறுதுமோ, யாழ |
30 | நிறை ஆற்றா நெஞ்சு உடையேம்? |