| கயந்தலைக் குழவிக் கவியுகிர் மடப்பிடி | 5. | குளகுமறுத் துயங்கிய மருங்குல் பலவுடன் பாழூர்க் குரம்பையில் தோன்றும் ஆங்கண் நெடுஞ்சேண் இடைய குன்றம் போகி பொய்வ லாளர் முயன்றுசெய் பெரும்பொருள் நம்மின் றாயினும் முடிக வல்லெனப் | 10. | பொருந்துனி மேவல் நல்கூர் குறுமகள் நோய்மலிந் துகுத்த நொசிவரற் சின்னீர் பல்லிதழ் மழைக்கட் பாவை மாய்ப்பப் பொன்னேர் பசலை ஊர்தரப் பொறிவரி நன்மா மேனி தொலைதல் நோக்கி | 15. | இனையல் என்றி தோழி சினைய பாசரும்பு ஈன்ற செம்முகை முருக்கினப் போதவிழ் அலரி கொழுதித் தாதருந்து அந்தளிர் மாஅத்து அலங்கன் மீமிசைச் செங்கண் இருங்குயில் நயவரக் கூஉம் | 20. | இன்னிள வேனிலும் வாரார் இன்னே வருதும் எனத்தெளித் தோரே. | | -மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். |
(சொ - ள்.) 10. நல்கூர் குறுமகள் - மகட்கு நல் கூர்ந்தாரது செல்வ மகளாகிய இளைய தலைவியே! 1-10. பகல் செய் பல்கதிர் பருதி அம் செல்வன் - பகலைத் தோற்றுவிக்கும் பல கதிர்களையுடைய ஞாயிறாகிய அழகிய செல்வனது, அகல் வாய் வானத்து ஆழி- அகன்ற இடமாகிய வானின் கண்ணுள்ள ஆணையாய ஆழி, போழ்ந்தென - உலகைக் கிழித்துச் சென்றதாக, நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை - நீரில்லையாக வறந்திட்ட செல்லத் தொலையாத நீண்ட நெறியிடத்தே, கயம் தலை குழவிக் கவிஉகிர் மடப்பிடி - மெல்லிய தலையினையுடைய கன்றினையும் கவிந்த நகத்தினையுமுடைய இளைய யானை, குளகு மறுத்து உயங்கிய - தன் கன்றுண்ண வேண்டித் தான் தழை உணவை உண்ணாது மறுத் தமையின் வாடிய, மருங்குல் பலவுடன் - உடம்பின் உறுப்புக்கள் பலவற்றுடன், பாழ் ஊர் குரம்பையில் தோன்றும் ஆங்கண் - பாழ்பட்ட ஊரிலுள்ள குடிசைகள் போலத் தோன்றும் அவ்விடங்களையுடைய, நெடு சேண் இடைய குன்றம் போகிய-நெடிய சேய்மையிலுள்ள குன்றங்களைத் தாண்டிச் சென்ற, பொய்-வலாளர் - பொய் மிக்காராய நம் தலைவர், முயன்று செய் பெரும் பொருள்- |