54. முல்லை [வினைமுடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.] | விருந்தின் மன்னர் அருங்கலந் தெறுப்ப வேந்தனும் வெம்பகை தணிந்தனன் தீம்பெயற் காரும் ஆர்கலி தலையின்றி தேரும் ஒவத் தன்ன கோபச் செந்நிலம் | 5. | வள்வாய் ஆழி உள்ளுறு புருளக் கடவுக காண்குவம் பாக மதவுநடைத் தாம்பசை குழவி வீங்குசரை மடியக் கலையலங் குரல காற்பரி பயிற்றுப் படுமணி மிடற்ற பயநிரை யாயம் | 10. | கொடுமடி யுடையர் கோற்கைக் கோவலர் கொன்றையங் குழலர் பின்றைத் தூங்க மனைமனைப் படரும் நனைநகு மாலைத் தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன் பண்ணன் சிறுகுடிப் படப்பை நணிணலைப் | 15. | 1புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர் நீர்குடி சுவையில் தீவிய மிழற்றி முகிழ்நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள் பொன்னுடைத் தாலி யென்மகன் ஒற்றி வருகுவை யாயின் தருகுவென் பாலென | 20. | விலங்கமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றித் திதலை யல்குலெங் காதலி புதற்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே. | | 2-மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார். |
(சொ - ள்.) 6. பாக - பாகனே!, 1-3. விருந்தின் மன்னர் - புதிய அரசர், அருங்கலம் தெறுப்ப - திறையாக அரிய அணிகலன்களைக் குவிப்ப, வேந்தனும் வெம் பகை தணிந்தனன் - நம் அரசனும் கொடிய பகைமை தணியப்பெற்றனன். தீம் பெயல் காரும் ஆர்கலி தலையின்று - மேகமும் இனிய பெயலை மிக்க ஒலியுடன் பெய்தது;
(பாடம்) 1. புன்கால் நெல்லி. 2. நொச்சி நியமங்கிழார் மகனார்... |