211

(சொ - ள்.) 1-8. தலைவ., மூத்தோர் அன்ன வெண்தலைப் புணரி - முதியோரை ஒத்த வெள்ளிய தலையையுடைய கடல், இளை யோர் ஆடும் வரிமனை சிதைக்கும்-இளைய மகளிர் விளையாடு வண்டர் மனையினை அழிக்கும், தளைஅவிழ் தாழை கானல்அம் பெருந்துறை . கட்டவிழ்ந்த மடல்கள் பொருந்திய தாழைகளையுடைய சோலை பொருந்திய பெரிய கடற்றுறைக்கண்ணே, சில் செவித்தாகிய புணர்ச்சி - சிலர் செவிப்பட்ட மாத்திரையாகிய வட்டம், அலர்எழ- அலராகி எங்கம் பரவ, இல்வயின் செறித்தமை அறியாய்-தாய் தலைவியை இல்லிடத்தே செறித்தமையை அறியாயாகி, பல்நாள் - பலநாளும், அம் பகட்டு மார் பின் - நினது அழகிய பெருமையையுடைய மார்பினால், வருமுலை வருத்தா-வளரும் முலையினை யுடையாளை வருத்தி, தெருமரல் உள்ள மொடு வருந்தும் - கலங்கும் உள்ளத்தோடு வருந்தா நிற்கும், நின்வயின் - நின்னிடத்தே, நீங்குக என்று யான் யாங்ஙனம் மொழிகோ - இக் கள வொழுக்கத்தினின்றும் நீங்குவாயாக என்று யான் எங்ஙனம் மொழி வேன்;

9-14. நறு நுதல் அரிவை பாசிழை விலை-(இவள் தந்தைமார்) நறிய நுதலினையுடைய அரிவையாய இவளது பசிய அணிகட்கு விலை யாக, அருந் திறல் கடவுள் செல்லூர்க் குணாஅது-அரிய வலிகொண்ட தெய்வங்களையுடைய செல்லூரின் கீழ்ப்பாலினதாய், பெருங் கடல் முழக்கிற்றாகி - பெரிய கடல்போலும் ஆரவாரத்தினை யடையதாகிய, இரும்பு இடம்படுத்த வடு உடைமுகத்தர் - படைக்கலம் இடம்படச் செய்திட்ட வடுக்களையுடைய முகத்தினராய, கடுங்கட்கோசர்-அஞ்சா மையையுடைய கோசர்கள் (வாழும்), யாணர் நியமம் ஆயினம் - புது வருவாயையுடைய நியமம் என்னும் ஊரினைக் கொடுப்பினும், உறும் எனக் கொள்ளுநர் அல்லர் - அமையும் எனக் கொள்வார் அல்லர்.

(முடிபு) தலைவ! கானலம் பெருந்துறை சில் செவித்தாகிய புணர்ச்சி அலரெழ இற் செறித்தமை அறியாய், பன்னாள் இவளை வருத்தி வருந்தும் நின்வயின், (இக்கனவொழுக்கம்) நீங்குக என்று யாங்ஙனம் மொழிகோ! அரிவை பாசிழை விலை கோசர் நியமமாயினும் உறுமெனக் கொள்ளுநர் அல்லர்.

(வி - ரை.) ‘மூத்தோரன்ன சிதைக்கும்’ என்றது புணரி உருவினால் முதியோரை யொத்தும் சிறியரின் செய்கை யுடைய தாயிற்றென நயம்படக் கூறியவாறு. வருமுலை, இரும்பு என்பன ஆகுபெயர். மார்பு காரணமாக வருந்துதலின் மார்பின் வருத்தா என்றாள். எம் வருத்த மறிந்து நீயே வரைதற்கு முயலுதல் முறைமை யென்பாள், யான் யாங்ஙனம்மொழிகோ என்றாள். ஆகி என்றதனை ஆகிய எனத் திரிக்க. யாணர் நியமம் எனக் கூட்டுக. தலைவன் தலை வியைப் பான்னணிந்து வரைதல் வழக்காதலின் அரிவை பாசிழை விலை என்றாள். உறுமெனக் கொள்ளுநர் அல்லர் என்றமையால், பொருள் மிகக் கொடுக்கவேண்டு மெனத் தலைவியை அருமை பாராட்டியவாறு. அன்றி, விலை நியமம்