340

7-19. சேரலர் சுள்ளிஅம் பேர்யாற்றுவெண் நுரை கலங்க - சேர அரசரது சுள்ளியாகிய பேர்யாற்றினது வெள்ளிய நுரை சிதற, யவனர் தந்தவினைமாண் நல்கலம் - யவனர்கள் கொண்டு வந்ததொழில் மாட்சிமைப்பட்ட நல்ல மரக்கலம்,பொன்னொடு வந்து கறியொடு பெயரும் - பொன்னுடன்வந்து மிளகொடு மீளும், வளம்கெழு முசிறி ஆர்ப்பு எழவளைஇ - வளம் பொருந்திய முசிறி என்னும்பட்டினத்தை ஆரவாரம் மிக வளைத்து, அரும் சமம்கடந்து படிமம் வவ்விய - அரிய போரை வென்றுஅங்குள்ள பொற்பாவையினைக் கவர்ந்துகொண்ட, நெடுநல் யானை அடுபோர்ச் செழியன் - நெடிய நல்லயானைகளையும் வெல்லும் போரினையுமுடைய செழியனது,கொடி நுடங்க மறுகில் கூடல்குடாஅது - கொடி அசையும்தெருவினையுடைய கூடலின் மேல் பாலுள்ள, பல்பொறிமஞ்ஞை வெல்கொடி உயரிய - பல பொறிகளையுடையவெல்லும் மயிற் கொடியினை உயர்த்த, ஒடியாவிழவின் நெடியோன் குன்றத்து - இடையறாதவிழவினையுடைய முருகனது திருப்பரங்குன்றத்தே.வண்டுபட நீடிய குண்டு சுனை நீலத்து - வண்டுவீழ நீண்டஆழமான சுனையிற் பூத்த நீலப்பூவின், எதிர்மலர்ப்பிணையல் அன்ன - புதிய மலர் இரண்டின் சேர்க்கைபோன்ற, இவள் அரிமதர் மழைக் கண் தெண்பனிகொள -இவளது செவ்வரி படந்த மதர்த்த குளிர்ந்த கண்கள்தெளிந்த நீரினைக் கொள்ள, வாரேன் - வாரேன்,வாழி-

(முடிபு) நெஞ்சே! அத்த நீளிடைப்போகி, அரிதுசெய்விழுப்பொருள் எளிதிற் பெறினும், இவள் அரிமதர்மழைக்கண் தெண்பனி கொளவாரேன், வாழி!

(வி - ரை.) சுள்ளி, பேரியாறு என்பன சேரநாட்டு முசிறி மருங்குகடலிற் கலக்கும் ஓர் யாற்றின் பெயர்கள். யவனர்என்பார் எகித்து, கிரேக்கம் முதலிய புறநாட்டினர்.மரக்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்என்றது, பொன்னைக் கொண்டுவந்து விலையாகக்கொடுத்து மிளகை ஏற்றிச் செல்லும் என்றபடி. எனவேஅந்நாளில் சேரர்நாட்டு வாணிபம்சிறந்திருந்தமை பெற்றாம். படிமம் என்றதுமுசிறியி லிருந்ததோர் தெய்வ விம்பம்போலும்.கூடலின் குடக்கின்கண்ணதாகிய குன்றம் என்க.வாரேன் என்றதனால் நீ வேண்டிற் செல்லுதிஎன்றானாம்.