பக்கம் எண் :

களிற்றியானை நிரை183

77. பாலை

[தலைமகன் பிரியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்குவித்தது.]

நன்னுதல் பசப்பவும் ஆள்வினை தரீஇயர்
துன்னருங் கானந் துன்னுதல் நன்றெனப்
பின்னின்று சூழ்ந்தனை யாயினன் றின்னாச்
சூழ்ந்திசின் வாழிய நெஞ்சே வெய்துற
5. இடியுமிழ் வானம் நீங்கி யாங்கணும்
குடிபதிப் பெயர்ந்த சட்டுடை முதுபாழக்
கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்
பொறிகண் டழிக்கும் ஆவண மாக்களின்
உயிர்திறம் பெயர நல்லமர்க் கடந்த
10. தறுக ணாளர் குடர்தரீஇத் தெறுவரச்
செஞ்செவி எருவை யஞ்சுவர இகுக்குங்
கல்லதர்க் கவலை போகின் சீறூர்ப்
புல்லரை யித்திப் புகர்படு நீழ
எல்வளி யலைக்கும் இருள்கூர் மாலை
15. வானவன் மறவன் வணங்குவிற் றடக்கை
ஆனா நறவின் வண்மகிழ்ப் பிட்டன்
பொருந்தா மன்னர் அருஞ்சமத் துயர்த்த
திருந்திலை யெஃகம் போல
அருந்துயர் தருமிவள் பனிவார் கண்ணே.

-மருத னிளநாகனார்.

(சொ - ள்.) 4. நெஞ்சே வாழிய-,

1-4. நன்னுதல் பசப்பவும் - நம் தலைவியின் ஒள்ளிய நெற்றி பசந்திடவும், ஆள்வினை தரீஇயர் - முயற்சியால் பொருள் ஈட்டுதற்கு, துன் அருங் கானம் - அடைதற்கரிய காட்டு நெறியில், துன்னுதல் நன்றென-செல்லுதல் நன்றென எண்ணி, பின்னின்று-என் பின்னே நின்று, சூழ்ந்தனையாயின் - எண்ணுதியாயின், நன்று இன்னா சூழ்ந்தி சின் - மிகவும் கொடியவற்றை ஆய்ந்தகொண்டனை யாவாய்; (எதனாலெனின்,)

4-6. வெய்துஉற இடி உமிழ் வானம் - இடிகளை உமிழும் மேகம் வெம்மைமிக, நீங்கி-மழை பெய்யாது நீங்குதலால், யாங்கணும் குடி பதிப்பெயர்ந்த-எவ்விடத்தும் குடிகள் தத்தம் பதிகளினின்றும் பெயர்ந்து போகற் கேதுவாய, சுட்டு உடை முது பாழ் - பலரும சுட்டிக்கூறும் மிக்க பாழிடமாகிய பாலையில்;