77. பாலை [தலைமகன் பிரியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்குவித்தது.] | நன்னுதல் பசப்பவும் ஆள்வினை தரீஇயர் துன்னருங் கானந் துன்னுதல் நன்றெனப் பின்னின்று சூழ்ந்தனை யாயினன் றின்னாச் சூழ்ந்திசின் வாழிய நெஞ்சே வெய்துற | | 5. | இடியுமிழ் வானம் நீங்கி யாங்கணும் குடிபதிப் பெயர்ந்த சட்டுடை முதுபாழக் கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார் பொறிகண் டழிக்கும் ஆவண மாக்களின் உயிர்திறம் பெயர நல்லமர்க் கடந்த | | 10. | தறுக ணாளர் குடர்தரீஇத் தெறுவரச் செஞ்செவி எருவை யஞ்சுவர இகுக்குங் கல்லதர்க் கவலை போகின் சீறூர்ப் புல்லரை யித்திப் புகர்படு நீழ எல்வளி யலைக்கும் இருள்கூர் மாலை | | 15. | வானவன் மறவன் வணங்குவிற் றடக்கை ஆனா நறவின் வண்மகிழ்ப் பிட்டன் பொருந்தா மன்னர் அருஞ்சமத் துயர்த்த திருந்திலை யெஃகம் போல அருந்துயர் தருமிவள் பனிவார் கண்ணே. | | -மருத னிளநாகனார். |
(சொ - ள்.) 4. நெஞ்சே வாழிய-, 1-4. நன்னுதல் பசப்பவும் - நம் தலைவியின் ஒள்ளிய நெற்றி பசந்திடவும், ஆள்வினை தரீஇயர் - முயற்சியால் பொருள் ஈட்டுதற்கு, துன் அருங் கானம் - அடைதற்கரிய காட்டு நெறியில், துன்னுதல் நன்றென-செல்லுதல் நன்றென எண்ணி, பின்னின்று-என் பின்னே நின்று, சூழ்ந்தனையாயின் - எண்ணுதியாயின், நன்று இன்னா சூழ்ந்தி சின் - மிகவும் கொடியவற்றை ஆய்ந்தகொண்டனை யாவாய்; (எதனாலெனின்,) 4-6. வெய்துஉற இடி உமிழ் வானம் - இடிகளை உமிழும் மேகம் வெம்மைமிக, நீங்கி-மழை பெய்யாது நீங்குதலால், யாங்கணும் குடி பதிப்பெயர்ந்த-எவ்விடத்தும் குடிகள் தத்தம் பதிகளினின்றும் பெயர்ந்து போகற் கேதுவாய, சுட்டு உடை முது பாழ் - பலரும சுட்டிக்கூறும் மிக்க பாழிடமாகிய பாலையில்; |