(சொ - ள்.) 12. வாழிய நெஞ்சே-; 1-4. தீம் தயிர் கடைந்த திரள்கால் மத்தம் - இனிய தயிரைக் கடைந்த திரண்ட தண்டினையுடைய மத்து, கன்று வாய் சுவைப்ப முன்றில் தூங்கும் - கன்று தன் வாயாற் சுவைத்திட முற்றத்தே தொங்கும், படலைப் பந்தர்ப் புல்வேய் குரம்பை - மர நிழலாகிய பந்தரையும் புல்லால் வேயப்பெற்ற குடில்களையுமுடைய, நல்கூர் சீறூர்-வறுமைப்பட்ட சிறிய ஊரின்கண், எல்லித் தங்கி - இரவிற்றங்கி; 5-6. குடுமி நெற்றி நெடுமரச் சேவல் - செஞ்சூடுபொருந்திய நெற்றியையுடைய நீண்ட மரத்திலுள்ள சேவலின், தலைக்குரல் விடியற் கோகி - முதற் குரல் எழுந்த விடியற்காலையிற் புறப்பட்டுச் சென்று; 6-11. முனாஅது - பழைமை யுடையதாகிய, கடுங்கண் மறவர் கல்கெழு குறும்பன் எழுந்த - வன்கண்மையுடைய மறவரது கற்கள் பொருந்திய காட்டரண்களில் எழுந்த, தண்ணுமை இடங்கண் பாணி-தண்ணுமைப் பறையின் அகன்ற கண்ணினின் றெழும் ஒலி, அருஞ்சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென இசைக்கும்-அரிய சுர நெறியே செல்வோர் நெஞ்சு நடுக்குற ஒலிக்கும், குன்று சேர்கவலை அத்தம்-குன்றினைச் சார்ந்த கவர்த்த நெறிகளையுடைய காட்டில், நனி நீடு உழந்தனைமன் - நீ மிகவும் நெடிது வருந்தினை; 11-6. அதனால் - ஆதலால், மை அற வைகு சுடர் விளங்கம் வான்றோய் வியன்நகர் - இருள் நீங்க விடிவிளக்கு விளங்குகின்ற வான் அளாவிய நம் பெரிய மாளிகையின்கண், தாழ்இருங் வந்தல் நம் காதலி சுணங்க அணி வனமுலை நலம் பாராட்டி - தாழ்ந்த கரிய கூந்தலை யுடைய நம் காதலியின் சுணங்கு அணிந்த அழகிய முலையின் நல்லின் பத்தைப் பாராட்டி, நீள் அமை வனப்பின் தோளும் அணைந்து - நீண்ட மூங்கில் போன்ற அழகினையுடைய தோளினையும் அணைந்து, உவஇனி - இப்பொழுது மகிழ்வாயாக. (முடிபு) நெஞ்சே வாழிய! நீ சீறூர் எல்லித் தங்கி விடியற் போகி அத்தம் நீடு உழந்தனை மன்னே; அதனால் வியனகர், நம் காதலி முலை நலம் பாராட்டி, தோளும் அணைந்து இனி உவ. (வி - ரை.) படலை - தழைப்பரப்பு, படலைப் பந்தர் - மர நிழலாகிய பந்தர். வினைமுற்றி மீள்கின்றா னாகலின் இப்பொழுது உவ என்றான். மை - இருள். வைகு சுடர் - விடியுமளவும் எரியும் விளங்கு. விடிவிளக்கு எனப்படும். தோளுமார், ஆர், அசை. |