பக்கம் எண் :

களிற்றியானை நிரை7

மலை; பழனி, ‘நெடுவே ளாவி, பொன்னுடை நெடுநகர்ப் பொதினி’ (61) எனவும், ‘சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கற்போல்’ (356) எனவும் பின்னர் வருவன அறியற் பாலன.

(மே - ள்.) ‘முதல் கரு உரிப்பொருள்’1 என்னுஞ் சூத்திரவுரையில் இச் செய்யுளை எடுத்துக்காட்டி, பாலைக்கு முதலுங் கருவும் வந்து முதற் பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது என்றார். நச்.

2. குறிஞ்சி

[பகற்குறிக்கட் செறிப்பறிவுறீ இத் தோழி வரைவு கடாயது.]

 கோழிலை வாழைக் கோண்மிகு2 பெருங்குலை
ஊழுறு தீங்கனி உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொ டூழ்படு
பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல்
5.அறியா துண்ட கடுவன் அயலது
கறிவளர் சாந்தம் ஏறல்செல் லாது
நறுவீ அடுக்கத்து மகிழந்துகண் படுக்கும்
குறியா இன்பம் எளிதின் நின்மலைப்
பல்வேறு விலங்கும் எய்து நாட
10.குறித்த இன்பம் நினக்கெவன் அரிய
வெறுத்த வேஎர் வேய்புரை
3 பணைத்தோள்
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்
டிவளும் இனைய ளாயின் தந்தை
அருங்கடிக் காவலர் சோர்பதன் ஒற்றிக்
15.கங்குல் வருதலும் உரியை பைம்புதல்
வேங்கையும் ஒள்ளிணர் விரிந்தன
நெடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே.
 

-கபிலர்

(சொ - ள்.) 1-9. கோழ இலை வாழைக் கோள்மிகு பெருங்குலை ஊழ்ஊறு தீங்கனி - வளவிய இலைகளையுடைய வாழையின் காய்த்தல் மிக்க பெரிய குலையிலுள்ள முதிர்ச்சியுற்ற இனிய கனியாலும், உண்ணுநாத் தடுத்த சாரற் பலவின் ஊழ்படு சுளையொடு-தம்மை


1. தொல். அகத்: 3.

(பாடம்) 2. கோண் முதிர்.

3. வேய்மருள்.