|
|
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம் |
|
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு, |
|
இலை இல மலர்ந்த முகை இல் இலவம் |
|
கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த |
5 |
அம் சுடர் நெடுங் கொடி பொற்பத் தோன்றி, |
|
கயம் துகள் ஆகிய பயம் தபு கானம் |
|
எம்மொடு கழிந்தனர்ஆயின், கம்மென, |
|
வம்பு விரித்தன்ன பொங்கு மணற் கான் யாற்றுப் |
|
படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர், |
10 |
மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம் |
|
அவரும் பெறுகுவர்மன்னே! நயவர, |
|
நீர் வார் நிகர் மலர் கடுப்ப, ஓ மறந்து |
|
அறு குளம் நிறைக்குந போல, அல்கலும் |
|
அழுதல் மேவல ஆகி, |
15 |
பழி தீர் கண்ணும் படுகுவமன்னே! |
|
தலைமகன் பொருள்வயிற் பிரிந்த இடத்து, ஆற்றாளாய தலைமகள் வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்கு, தலைமகள், ''ஆற்றுவல்''என்பது படச் சொல்லியது. - ஒளவையார் |
|
உரை |
|
யாயே, கண்ணினும் கடுங் காதலளே; |
|
எந்தையும், நிலன் உறப் பொறாஅன்; ''சீறடி சிவப்ப, |
|
எவன், இல! குறுமகள்! இயங்குதி?'' என்னும்; |
|
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின், |
5 |
இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே; |
|
ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும், |
|
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ் சினை, |
|
விழுக் கோட் பலவின் பழுப் பயம் கொண்மார், |
|
குறவர் ஊன்றிய குரம்பை புதைய, |
10 |
வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம் |
|
புலி செத்து, வெரீஇய புகர்முக வேழம், |
|
மழை படு சிலம்பில் கழைபட, பெயரும் |
|
நல் வரை நாட! நீ வரின், |
|
மெல்லியல் ஓரும் தான் வாழலளே. |
|
பகற்குறி வாராநின்ற தலைமகன் தோழியால் செறிப்பு அறிவுறுக்கப்பட்டு, ''இரவுக் குறி வாரா வரைவல்'' என்றாற்கு, அதுவும் மறுத்து, வரைவு கடாயது. - கபிலர் |
|
உரை |
|
தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும், |
|
முனை திறை கொடுக்கும் துப்பின், தன் மலைத் |
|
தெறல் அரு மரபின் கடவுட் பேணி, |
|
குறவர் தந்த சந்தின் ஆரமும், |
5 |
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும் |
|
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன் |
|
குழியில் கொண்ட மராஅ யானை |
|
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது, |
|
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும், |
10 |
வள் வாய் அம்பின், கோடைப் பொருநன் |
|
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின், |
|
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு, |
|
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து, |
|
சாயல் இன் துணை இவட் பிரிந்து உறையின், |
15 |
நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட |
|
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை, |
|
கவவு இன்புறாமைக் கழிக வள வயல், |
|
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற |
|
கழனி நெல் ஈன் கவைமுதல் அலங்கல் |
20 |
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வர, |
|
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை, |
|
இலங்கு பூங் கரும்பின் ஏர் கழை இருந்த |
|
வெண் குருகு நரல, வீசும் |
|
நுண் பல் துவலைய தண் பனி நாளே! |
|
பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகனைத் தோழி செலவழுங்குவித்தது; உடம்பட்ட தூஉம் ஆம். - பெருந்தலைச் சாத்தனார் |
|
உரை |
|
''அரக்கத்து அன்ன செந் நிலப் பெரு வழி, |
|
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன் |
|
ஈயல் மூதாய் வரிப்ப, பவளமொடு |
|
மணி மிடைந்தன்ன குன்றம் கவைஇய |
5 |
அம் காட்டு ஆர் இடை, மடப் பிணை தழீஇ, |
|
திரி மருப்பு இரலை புல் அருந்து உகள, |
|
முல்லை வியன் புலம் பரப்பி, கோவலர் |
|
குறும் பொறை மருங்கின் நறும் பூ அயர, |
|
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன் |
10 |
வீங்கு மாண் செருத்தல், தீம் பால் பிலிற்ற, |
|
கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும் |
|
மாலையும் உள்ளார்ஆயின், காலை |
|
யாங்கு ஆகுவம்கொல்? பாண!'' என்ற |
|
மனையோள் சொல் எதிர் சொல்லல்செல்லேன், |
15 |
செவ்வழி நல் யாழ் இசையினென், பையென, |
|
கடவுள் வாழ்த்தி, பையுள் மெய்ந் நிறுத்து, |
|
அவர் திறம் செல்வேன் கண்டனென், யானே |
|
விடு விசைக் குதிரை விலங்கு பரி முடுக, |
|
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமிக் |
20 |
கார் மழை முழக்கு இசை கடுக்கும், |
|
முனை நல் ஊரன், புனை நெடுந் தேரே. |
|
பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தனார் |
|
உரை |
|
எம் வெங் காமம் இயைவது ஆயின், |
|
மெய்ம் மலி பெரும் பூண், செம்மற் கோசர் |
|
கொம்மைஅம் பசுங் காய்க் குடுமி விளைந்த |
|
பாகல் ஆர்கைப் பறைக் கட் பீலித் |
5 |
தோகைக் காவின் துளுநாட்டு அன்ன, |
|
வறுங் கை வம்பலர்த் தாங்கும் பண்பின் |
|
செறிந்த சேரிச் செம்மல் மூதூர், |
|
அறிந்த மாக்கட்டு ஆகுகதில்ல |
|
தோழிமாரும் யானும் புலம்ப, |
10 |
சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன் |
|
பாழி அன்ன கடியுடை வியல் நகர்ச் |
|
செறிந்த காப்பு இகந்து, அவனொடு போகி, |
|
அத்த இருப்பை ஆர் கழல் புதுப் பூத் |
|
துய்த்த வாய, துகள் நிலம் பரக்க, |
15 |
கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி, |
|
வன் கை எண்கின் வய நிரை பரக்கும் |
|
இன் துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்கு |
|
குன்ற வேயின் திரண்ட என் |
|
மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே! |
|
மகட்போக்கிய தாய்சொல்லியது. - மாமூலனார் |
|
உரை |
|
நாயுடை முது நீர்க் கலித்த தாமரைத் |
|
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும், |
|
மாசு இல் அங்கை, மணி மருள் அவ் வாய், |
|
நாவொடு நவிலா நகைபடு தீம் சொல், |
5 |
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை, |
|
தேர் வழங்கு தெருவில், தமியோற் கண்டே! |
|
கூர் எயிற்று அரிவை குறுகினள்; யாவரும் |
|
காணுநர் இன்மையின், செத்தனள் பேணி, |
|
பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை, |
10 |
''வருகமாள, என் உயிர்!'' எனப் பெரிது உவந்து, |
|
கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச் செல்லேன், |
|
''மாசு இல் குறுமகள்! எவன் பேதுற்றனை? |
|
நீயும் தாயை இவற்கு?'' என, யான் தற் |
|
கரைய, வந்து விரைவனென் கவைஇ |
15 |
களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம் கிளையா, |
|
நாணி நின்றோள் நிலை கண்டு, யானும் |
|
பேணினென் அல்லெனோ மகிழ்ந! வானத்து |
|
அணங்கு அருங் கடவுள் அன்னோள் நின் |
|
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே? |
|
பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைமகன், ''யாரையும் அறியேன்'' என்றாற்குத் தலைமகள் சொல்லியது. - சாகலாசனார் |
|
உரை |
|
வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும், |
|
இளந் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும், |
|
''உயங்கின்று, அன்னை! என் மெய்'' என்று அசைஇ, |
|
மயங்கு வியர் பொறித்த நுதலள், தண்ணென, |
5 |
முயங்கினள் வதியும்மன்னே! இனியே, |
|
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள், |
|
நெடு மொழித் தந்தை அருங் கடி நீவி, |
|
நொதுமலாளன் நெஞ்சு அறப் பெற்ற என் |
|
சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி |
10 |
வல்லகொல், செல்லத் தாமே கல்லென |
|
ஊர் எழுந்தன்ன உரு கெழு செலவின், |
|
நீர் இல் அத்தத்து ஆர் இடை, மடுத்த, |
|
கொடுங் கோல் உமணர், பகடு தெழி தெள் விளி |
|
நெடும் பெருங் குன்றத்து இமிழ் கொள இயம்பும், |
15 |
கடுங் கதிர் திருகிய, வேய் பயில், பிறங்கல், |
|
பெருங் களிறு உரிஞ்சிய மண்அரை யாஅத்து |
|
அருஞ் சுரக் கவலைய அதர் படு மருங்கின், |
|
நீள் அரை இலவத்து ஊழ் கழி பல் மலர், |
|
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர், |
20 |
நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி, |
|
வைகுறு மீனின் தோன்றும் |
|
மை படு மா மலை விலங்கிய சுரனே? |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார் |
|
உரை |
|
நீர் நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து, |
|
பூமலர் கஞலிய கடு வரற் கான் யாற்று, |
|
கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி, |
|
மராஅ யானை மதம் தப ஒற்றி, |
5 |
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம் |
|
கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து, |
|
நாம அருந் துறைப் பேர்தந்து, யாமத்து |
|
ஈங்கும் வருபவோ? ஓங்கல் வெற்ப! |
|
ஒரு நாள் விழுமம் உறினும், வழி நாள், |
10 |
வாழ்குவள்அல்லள், என் தோழி; யாவதும் |
|
ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர் |
|
நீடு இன்று ஆக இழுக்குவர்; அதனால், |
|
உலமரல் வருத்தம் உறுதும்; எம் படப்பைக் |
|
கொடுந் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை, |
15 |
பழம் தூங்கு நளிப்பின் காந்தள்அம் பொதும்பில், |
|
பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலை |
|
வாங்கு அமைக் கண் இடை கடுப்ப, யாய் |
|
ஓம்பினள் எடுத்த, தட மென் தோளே. |
|
தோழி இரவு வருவானைப் பகல் வா என்றது. - கபிலர் |
|
உரை |
|
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே; வந்து நனி |
|
வருந்தினை வாழி, என் நெஞ்சே! பருந்து இருந்து |
|
உயா விளி பயிற்றும், யா உயர், நனந்தலை, |
|
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும் |
5 |
கடுங் குரற் குடிஞைய நெடும் பெருங் குன்றம், |
|
எம்மொடு இறத்தலும்செல்லாய்; பின் நின்று, |
|
ஒழியச் சூழ்ந்தனைஆயின், தவிராது, |
|
செல் இனி; சிறக்க, நின் உள்ளம்! வல்லே |
|
மறவல் ஓம்புமதி, எம்மே நறவின் |
10 |
சேயிதழ் அனைய ஆகி, குவளை |
|
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை, |
|
உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி, |
|
பழங்கண் கொண்ட, கலிழ்ந்து வீழ், அவிர் அறல் |
|
வெய்ய உகுதர, வெரீஇ, பையென, |
15 |
சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை |
|
பூ வீ கொடியின் புல்லெனப் போகி, |
|
அடர்செய் ஆய் அகல் சுடர் துணை ஆக, |
|
இயங்காது வதிந்த நம் காதலி |
|
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே! |
|
நெஞ்சினாற் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன், தலைமகள் நலன் நயந்து உள்ளிய நெஞ்சினைக் கழறியது. - பொருந்தில் இளங்கீரனார் |
|
உரை |
|
பெருநீர் அழுவத்து எந்தை தந்த |
|
கொழு மீன் உணங்கற் படு புள் ஓப்பி, |
|
எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ, |
|
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி, |
5 |
ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடுங் கழித் |
|
தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி, |
|
கொண்டல் இடு மணல் குரவை முனையின் |
|
வெண் தலைப் புணரி ஆயமொடு ஆடி, |
|
மணிப் பூம் பைந் தழை தைஇ, அணித்தகப் |
10 |
பல் பூங் கானல் அல்கினம் வருதல் |
|
கவ்வை நல் அணங்கு உற்ற, இவ் ஊர், |
|
கொடிது அறி பெண்டிர் சொற்கொண்டு, அன்னை |
|
கடி கொண்டனளே தோழி! ''பெருந்துறை, |
|
எல்லையும் இரவும் என்னாது, கல்லென |
15 |
வலவன் ஆய்ந்த வண் பரி |
|
நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு'' எனவே. |
|
பகற்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியது. - உலோச்சனார் |
|
உரை |
|