|
|
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் மண்டிலம் |
|
புலங்கடை மடங்கத் தெறுதலின், ஞொள்கி, |
|
''நிலம் புடைபெயர்வது அன்றுகொல், இன்று?'' என, |
|
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து, |
5 |
இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து |
|
மேற் கவட்டு இருந்த பார்ப்பினங்கட்கு, |
|
கல்லுடைக் குறும்பின் வயவர் வில் இட, |
|
நிண வரிக் குறைந்த நிறத்த அதர்தொறும், |
|
கணவிர மாலை இடூஉக் கழிந்தன்ன |
10 |
புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர் |
|
கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி, |
|
''சென்றார்'' என்பு இலர் தோழி! வென்றியொடு |
|
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத் |
|
தமிழ் கெழு மூவர் காக்கும் |
15 |
மொழி பெயர் தேஎத்த பல் மலை இறந்தே. |
|
''பிரிவிடை ஆற்றாளாயினாள்'' என்று பிறர் சொல்லக் கேட்டு, வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார் |
|
உரை |
|
நெருநல் எல்லை ஏனல் தோன்றி, |
|
திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து, |
|
புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள, |
|
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி, |
5 |
சிறு தினைப் படு கிளி கடீஇயர், பல் மாண் |
|
குளிர் கொள் தட்டை மதன் இல புடையா, |
|
''சூரரமகளிரின் நின்ற நீ மற்று |
|
யாரையோ? எம் அணங்கியோய்! உண்கு'' எனச் |
|
சிறுபுறம் கவையினனாக, அதற்கொண்டு |
10 |
இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு, அஞர் உற்ற என் |
|
உள் அவன் அறிதல் அஞ்சி, உள் இல் |
|
கடிய கூறி, கை பிணி விடாஅ, |
|
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, நின்ற |
|
என் உரத் தகைமையின் பெயர்த்து, பிறிது என்வயின் |
15 |
சொல்ல வல்லிற்றும்இலனே; அல்லாந்து, |
|
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும் |
|
தோலாவாறு இல்லை தோழி! நாம் சென்மோ. |
|
சாய் இறைப் பணைத் தோட் கிழமை தனக்கே |
|
மாசு இன்றாதலும் அறியான், ஏசற்று, |
20 |
என் குறைப் புறனிலை முயலும் |
|
அண்கணாளனை நகுகம், யாமே. |
|
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது; தோழிக்குத் தலைமகள் சொற்றதூஉம் ஆம்.- நல்வெள்ளியார் |
|
உரை |
|
வினை நன்றாதல் வெறுப்பக் காட்டி, |
|
"மனை மாண் கற்பின் வாணுதல் ஒழிய, |
|
கவை முறி இழந்த செந் நிலை யாஅத்து |
|
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த, வன் பறை, |
5 |
வீளைப் பருந்தின் கோள் வல் சேவல் |
|
வளை வாய்ப் பேடை வரு திறம் பயிரும் |
|
இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம் |
|
செலவு அருங்குரைய என்னாது, சென்று, அவள் |
|
மலர் பாடு ஆன்ற, மை எழில், மழைக் கண் |
10 |
தெளியா நோக்கம் உள்ளினை, உளி வாய் |
|
வெம் பரல் அதர குன்று பல நீந்தி, |
|
யாமே எமியம் ஆக, நீயே |
|
ஒழியச் சூழ்ந்தனைஆயின் முனாஅது |
|
வெல் போர் வானவன் கொல்லி மீமிசை, |
15 |
நுணங்கு அமை புரையும் வணங்கு இறைப் பணைத் தோள், |
|
வரி அணி அல்குல், வால் எயிற்றோள்வயின் |
|
பிரியாய்ஆயின் நன்றுமன் தில்ல. |
|
அன்று நம் அறியாய்ஆயினும், இன்று நம் |
|
செய்வினை ஆற்றுற விலங்கின், |
20 |
எய்துவைஅல்லையோ, பிறர் நகு பொருளே? |
|
தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் |
|
உரை |
|
சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும் புதல் |
|
கண்ணியின் மலரும் தண் நறும் புறவில், |
|
தொடுதோற் கானவன் கவை பொறுத்தன்ன |
|
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை |
5 |
செறி இலைப் பதவின் செங் கோல் மென் குரல் |
|
மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தி, |
|
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை, |
|
மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும் |
|
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற, |
10 |
செல்க, தேரே நல் வலம் பெறுந! |
|
பசை கொல் மெல் விரல், பெருந் தோள், புலைத்தி |
|
துறை விட்டன்ன தூ மயிர் எகினம் |
|
துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில், |
|
செந் தார்ப் பைங் கிளி முன்கை ஏந்தி, |
15 |
''இன்று வரல் உரைமோ, சென்றிசினோர் திறத்து'' என, |
|
இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென |
|
மழலை இன் சொல் பயிற்றும் |
|
நாணுடை அரிவை மாண் நலம் பெறவே. |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் |
|
உரை |
|
ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள், |
|
வான் தோய் இஞ்சி நல் நகர் புலம்ப |
|
தனி மணி இரட்டும் தாளுடைக் கடிகை, |
|
நுழை நுதி நெடு வேல், குறும் படை, மழவர் |
5 |
முனை ஆத் தந்து, முரம்பின் வீழ்த்த |
|
வில் ஏர் வாழ்க்கை விழுத் தொடை மறவர் |
|
வல் ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார், |
|
நடுகல் பீலி சூட்டி, துடிப்படுத்து, |
|
தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும் |
10 |
போக்கு அருங் கவலைய புலவு நாறு அருஞ் சுரம் |
|
துணிந்து, பிறள் ஆயினள்ஆயினும், அணிந்து அணிந்து, |
|
ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ, தன் |
|
மார்பு துணையாகத் துயிற்றுகதில்ல |
|
துஞ்சா முழவின் கோவற் கோமான் |
15 |
நெடுந் தேர்க் காரி கொடுங்கால் முன்துறை, |
|
பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும் |
|
நெறி இருங் கதுப்பின் என் பேதைக்கு, |
|
அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே! |
|
மகட்போக்கிய நற்றாய் தெய்வத்திற்குப் பராஅயது.-குடவாயிற் கீரத்தனார் |
|
உரை |
|
பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக் |
|
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி, |
|
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக் |
|
கூம்பு விடு பல் மலர் சிதையப் பாய்ந்து, எழுந்து, |
5 |
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி, |
|
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது, |
|
கயிறு இடு கதச் சேப் போல, மதம் மிக்கு, |
|
நாள், கயம் உழக்கும் பூக் கேழ் ஊர! |
|
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை, |
10 |
திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில், |
|
நறும் பல் கூந்தற் குறுந் தொடி மடந்தையொடு |
|
வதுவை அயர்ந்தனை என்ப. அலரே, |
|
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன் |
|
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப, |
15 |
சேரல், செம்பியன், சினம் கெழு திதியன், |
|
போர் வல் யானைப் பொலம் பூண் எழினி, |
|
நார் அரி நறவின் எருமையூரன், |
|
தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் |
|
இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன், என்று |
20 |
எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல் |
|
முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல, |
|
கொன்று, களம்வேட்ட ஞான்றை, |
|
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே! |
|
தலைமகள் பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனொடு புலந்து சொல்லியது. - மதுரை நக்கீரர் |
|
உரை |
|
மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக் |
|
கங்குல் ஓதைக் கலி மகிழ் உழவர் |
|
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள், |
|
மங்குல் வானின், மாதிரம் மறைப்ப, |
5 |
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி, |
|
தொழிற் செருக்கு அனந்தர் வீட, எழில் தகை |
|
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்துக் |
|
கிளி போல் காய கிளைத் துணர் வடித்து, |
|
புளிப்பதன் அமைத்த புதுக் குட மலிர் நிறை |
10 |
வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ்ப் பசுங் குடை, |
|
கயம் மண்டு பகட்டின் பருகி, காண் வர, |
|
கொள்ளொடு பயறு பால் விரைஇ, வெள்ளிக் |
|
கோல் வரைந்தன்ன வால் அவிழ் மிதவை |
|
வாங்கு கை தடுத்த பின்றை, ஓங்கிய |
15 |
பருதிஅம் குப்பை சுற்றி, பகல் செல, |
|
மருதமர நிழல், எருதொடு வதியும் |
|
காமர் வேனில்மன் இது, |
|
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே! |
|
தலைமகள் தோழிக்கு வன்புறை எதிர் அழிந்து சொல்லியது; பிரிவுணர்த்திய தோழி சொல்லியதூஉம் ஆம்.-விற்றூற்று மூதெயினனார் |
|
உரை |
|
விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன், |
|
தெரி இதழ்க் குவளைத் தேம் பாய் தாரன், |
|
அம் சிலை இடவது ஆக, வெஞ் செலல் |
|
கணை வலம் தெரிந்து, துணை படர்ந்து உள்ளி, |
5 |
வருதல் வாய்வது, வான் தோய் வெற்பன். |
|
வந்தனன் ஆயின், அம் தளிர்ச் செயலைத் |
|
தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று |
|
ஊசல் மாறிய மருங்கும், பாய்பு உடன் |
|
ஆடாமையின் கலுழ்பு இல தேறி, |
10 |
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம் |
|
கண் என மலர்ந்த சுனையும், வண் பறை |
|
மடக் கிளி எடுத்தல்செல்லாத் தடக் குரல் |
|
குலவுப் பொறை இறுத்த கோல் தலை இருவி |
|
கொய்து ஒழி புனமும், நோக்கி; நெடிது நினைந்து; |
15 |
பைதலன் பெயரலன்கொல்லோ? ஐ தேய்கு |
|
''அய வெள் அருவி சூடிய உயர் வரைக் |
|
கூஉம் கணஃது எம் ஊர்'' என |
|
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின், யானே. |
|
தோழி தலைமகன் குறை கூறியது; பகலே சிறைப்புறமாக,தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்;தோழி குறி பெயர்த்திட்டுச் சொல்லியதூஉம் ஆம்.- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் |
|
உரை |
|
''ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப் படர்ந்து, |
|
உள்ளியும் அறிதிரோ, எம்?'' என, யாழ நின் |
|
முள் எயிற்றுத் துவர் வாய் முறுவல் அழுங்க, |
|
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல்; நின் |
5 |
ஆய் நலம் மறப்பெனோ மற்றே? சேண் இகந்து |
|
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி |
|
படு ஞெமல் புதையப் பொத்தி, நெடு நிலை |
|
முளி புல் மீமிசை வளி சுழற்றுறாஅக் |
|
காடு கவர் பெருந் தீ ஓடுவயின் ஓடலின், |
10 |
அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு |
|
மதர் புலி வெரீஇய மையல் வேழத்து |
|
இனம் தலை மயங்கிய நனந் தலைப் பெருங் காட்டு, |
|
ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டென, |
|
கள் படர் ஓதி! நிற் படர்ந்து உள்ளி, |
15 |
அருஞ் செலவு ஆற்றா ஆர் இடை, ஞெரேரெனப் |
|
பரந்து படு பாயல் நவ்வி பட்டென, |
|
இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு, |
|
நிலம் கிளை நினைவினை நின்ற நிற் கண்டு, |
|
''இன்னகை''! இனையம் ஆகவும், எம்வயின் |
20 |
ஊடல் யாங்கு வந்தன்று?'' என, யாழ நின் |
|
கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி, |
|
நறுங் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து, |
|
வறுங் கை காட்டிய வாய் அல் கனவின் |
|
ஏற்று ஏக்கற்ற உலமரல் |
25 |
போற்றாய்ஆகலின், புலத்தியால், எம்மே! |
|
பொருள் முற்றிய தலைமகன் தலைமகளைக் கண்டு சொல்லியது.- மதுரைச் செங்கண்ணனார் |
|
உரை |
|
கானல், மாலைக் கழிப் பூக் கூம்ப, |
|
நீல் நிறப் பெருங் கடல் பாடு எழுந்து ஒலிப்ப, |
|
மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி |
|
குவை இரும் புன்னைக் குடம்பை சேர, |
5 |
அசை வண்டு ஆர்க்கும் அல்குறுகாலை, |
|
தாழை தளரத் தூக்கி, மாலை |
|
அழிதக வந்த கொண்டலொடு கழி படர்க் |
|
காமர் நெஞ்சம் கையறுபு இனைய, |
|
துயரம் செய்து நம் அருளார் ஆயினும் |
10 |
அறாஅலியரோ அவருடைக் கேண்மை! |
|
அளி இன்மையின் அவண் உறை முனைஇ, |
|
வாரற்கதில்ல தோழி! கழனி |
|
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும் |
|
தண்ணுமை வெரீஇய தடந் தாள் நாரை |
15 |
செறி மடை வயிரின் பிளிற்றி, பெண்ணை |
|
அகமடல் சேக்கும் துறைவன் |
|
இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே! |
|
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி, கிழத்தி தோழிக்குச் சொல்லியது.- குன்றியனார் |
|
உரை |
|